பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ஒரு நாள் கழித்து பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெள்ளிக்கிழமை (டிச.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “1971 இல் இந்த நாளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறந்துவிட்டார், இது வங்காளிகள் மற்றும் இந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையின் நேரடி விளைவாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் தனது சிறுபான்மையினரை நடத்துவதில் பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை என்றும், “ஜனநாயகத்தின் தாயான இந்தியாவை சீண்டல் செய்வதற்கு அதற்கு தகுதி இல்லை” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க நியூயார்க்கில் இருந்த பூட்டோ, “இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார், ஆனால் குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார், அவர் இந்தியாவின் பிரதமர்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நரேந்திர மோடி பிரதமராகும் வரை இந்த நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. “இவர் ஆர்எஸ்எஸ்ஸின் பிரதம மந்திரி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் வெளியுறவு அமைச்சர். ஆர்எஸ்எஸ் என்றால் என்ன? ஆர்எஸ்எஸ் ஹிட்லரின் ‘எஸ்எஸ்’ மூலம் உத்வேகம் பெறுகிறது,” என்றார்.
இதற்கு பதிலளித்த இந்திய செய்தித் தொடர்பாளர், “அண்டை நாட்டின் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவனுக்கு விருந்தளித்தவர்கள். அவர்கள் உபதேசம் செய்வதா? என்றார்.
சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை குறித்த கவுன்சில் விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் கருத்து வந்தது.
MEA செய்தித் தொடர்பாளர், வெள்ளிக்கிழமை அறிக்கையில், "பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும், புகலிடத்திலும், நிதியுதவி செய்வதிலும் பாகிஸ்தானின் மறுக்க முடியாத பங்கு தொடர்ந்து உள்ளது" என்று கூறினார்.
மேலும் பூட்டோவின் "நாகரீகமற்ற பேச்சு, பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதில் பாகிஸ்தானின் அதிகரித்து வரும் இயலாமையின் விளைவாகத் தெரிகிறது” என்றார்.
மேலும், ஒசாமா பின்லேடனை தியாகி என்று புகழ்ந்து, ஹபீஸ் சயீத், மசூத் அசார், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு பாகிஸ்தான்.
ஐநாவால் அறிவிக்கப்பட்ட 126 பயங்கரவாதிகள் மற்றும் 27 ஐநாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைப் பற்றி வேறு எந்த நாடும் பெருமை கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக வியாழக்கிழமை, 'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை: சவால்கள் மற்றும் முன்னோக்கி'க்கு தலைமை தாங்கிய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தின் தற்கால மையம் மிகவும் செயலில் உள்ளது" என்று பாகிஸ்தான் மீது மறைமுகத் தாக்குதலைத் தொடங்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil