மர வேலைகள், மயில் உருவம், பதோஹி கம்பளம்; புதிய மக்களவை அரங்கு எப்படி இருக்கும்?
புதிய பாராளுமன்றம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புக்கு பொறுப்பான மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), முக்கோண வடிவ கட்டமைப்பின் உட்புற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
புதிய பாராளுமன்றம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புக்கு பொறுப்பான மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), முக்கோண வடிவ கட்டமைப்பின் உட்புற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கடைசி நேர ஆயத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்த வாரம் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒன்று கூடுகிறது.
Advertisment
புதிய பாராளுமன்றம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புக்கு பொறுப்பான மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), முக்கோண வடிவ கட்டமைப்பின் உட்புற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சகத்தின் பிரத்யேக இணையதளத்தில் (centralvista.gov.in) கிடைக்கும் சமீபத்திய புகைப்படங்கள் – ஜனவரி 16ஆம் தேதி லோக்சபா அரங்குக்கு தொழிலாளர்கள் ஃபினிஷிங் டச் கொடுப்பதையும், தாழ்வாரங்களில் கலை மற்றும் முற்றங்களில் நடந்து கொண்டிருக்கும் வேலைகளைக் காட்டுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு. (Photo credit: centralvista.gov.in)
Advertisment
Advertisements
இந்த திட்டம் நவம்பர் 2022 இல் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அமைச்சக அதிகாரிகள் இப்போது ஜனவரி இறுதிக்குள் அது தயாராகிவிடும் என்று கூறுகிறார்கள். எவ்வாறாயினும், பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் தொடங்குமா அல்லது கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி அதில் நடைபெறுமா என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
புதிய பாராளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபா மண்டபம். (Photo Credit: centralvista.gov.in)
ரெய்சினா சாலை மற்றும் செஞ்சிலுவைச் சாலையில் உள்ள சேவைகளுக்கான நிலத்தை மேம்படுத்த ரூ.9.29 கோடி டெண்டர், புதிய கட்டிடத்தை 36 மாதங்களுக்கு ஹவுஸ் கீப்பிங்கிற்கான ரூ.24.65 கோடி டெண்டர் உட்பட புதிய நாடாளுமன்றத்தை தயார்படுத்த மத்திய பொதுப்பணித் துறை (CPWD) இந்த வாரம் டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் 2020ல் ரூ.861.9 கோடிக்கு டாடா ப்ராஜெக்ட்ஸுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், செலவு ரூ.1,200 கோடியாக அதிகரித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டுமானத்திற்கான ஜிஎஸ்டி அதிகரிப்பு, 2022ல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டதும் ஒரு காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு மண்டபம். (Photo Credit: centralvista.gov.in)
கட்டிடக் கலைஞர் பிமல் படேல் தலைமையிலான அகமதாபாத்தைச் சேர்ந்த HCP டிசைனால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம், தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 2021 இல் கட்டுமான வேலைகள் தொடங்கியது, டாடா ப்ராஜெக்ட்ஸ், மத்திய பொதுப்பணித்துறையின் (CPWD) ஒப்பந்ததாரராக இருந்தது. புதிய லோக்சபா அரங்கில் 888 இடங்கள் உள்ளன, மேலும் வருங்காலத்தில் சபையின் பலம் அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான எம்.பி.க்களுக்கு இடமளிக்கும் திறன் உள்ளது. ராஜ்யசபா அரங்கில் 384 இடங்கள் உள்ளன.
மேல்சபையின் உட்புறம் தாமரை கருப்பொருளாகவும், மக்களவையில் மயில் உருவங்களும் உள்ளன. புதிய கட்டிடத்தில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று மத்திய மண்டபம் இல்லை, அதற்கு பதிலாக லோக்சபா அரங்கு கூட்டு அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின், சென்ட்ரல் விஸ்டா இணையதளத்தின்படி, புதிய பாராளுமன்றம் ‘மரத்தாலான கட்டமைப்பின் விரிவான பயன்பாட்டைக் கொண்டிருக்கும்... பாரம்பரிய கருப்பொருள்கள் மற்றும் கூறுகளில் வேரூன்றியிருக்கும்... புதிய கட்டிடத்தின் தளங்களில், உத்தரபிரதேசத்தில் உள்ள பதோஹியில் இருந்து கையால் தரிக்கப்பட்ட கம்பளங்கள் இருக்கும்...
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வரைபடம். (Photo credit: centralvista.gov.in) புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஒரு கமிட்டி அறை. (Photo credit: centralvista.gov.in) சன்சாத் பவன். (Photo credit: centralvista.gov.in)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“