information-and-broadcasting-ministry | மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டீப்ஃபேக்குகள் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தல் என்றும், அவற்றைச் சமாளிக்க புதிய விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் கொண்டு வரும் என்றும் கூறினார்.
டீப்ஃபேக் பிரச்சினையில் சமூக ஊடக தள அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, “கண்டறிதல், தடுத்தல், புகாரளிக்கும் முறையை வலுப்படுத்துதல் மற்றும் பயனர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற துறைகளில் தெளிவான செயல்பாட்டின் அவசியத்தை நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன” என்றார்.
மேலும் வைஸ்ணவ், “நாங்கள் இன்றே ஒழுங்குமுறையை உருவாக்கத் தொடங்குவோம். குறுகிய காலத்திற்குள் டீப்ஃபேக்குகளுக்கான புதிய விதிமுறைகளை நாங்கள் பெறுவோம். இதன்மூலம் ஏற்கனவே உள்ள கட்டமைப்பை திருத்துவது அல்லது புதிய விதிகள் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வரலாம்" என்றார்.
தொடர்ந்து, “"டிசம்பர் முதல் வாரத்தில் எங்கள் அடுத்த சந்திப்பை நடத்துவோம்... அது இன்றைய முடிவுகள் மற்றும் வரைவு ஒழுங்குமுறையில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய தொடர் நடவடிக்கையில் இருக்கும்" என்றார்.
முன்னணி நடிகர்களை குறிவைத்து பல ‘டீப்ஃபேக்’ வீடியோக்கள் சமீப காலங்களில் சமூக ஊடக தளங்களில் வைரலாகி, பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டின.
சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட இடுகைகளில் ஷாருக் கான், விராட் கோலி மற்றும் அக்ஷய் குமார் போன்றவர்களின் டீப்ஃபேக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏவியேட்டர் என்ற விளையாட்டின் டீப்ஃபேக் வீடியோவில் ஷாருக்கான் காணப்பட்டாலும், விராட் கோலியின் டீப்ஃபேக் பந்தய விளையாட்டை ஊக்குவிக்கும் வீடியோவில் உள்ளது.
சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்தது. அசல் வீடியோவில் ஒரு பிரிட்டிஷ் இந்தியர் இடம்பெற்றிருந்தார், அதற்குப் பதிலாக மந்தனாவின் முகம் மார்பிங் செய்யப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் வாசிக்க : New regulation to tackle deepfakes soon; Vaishnaw meets social media platforms
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“