/indian-express-tamil/media/media_files/UcFjfBudHZJ8zT1ReoZW.jpg)
பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள சிக்டி பிளாக் பகுதியில் உள்ள பாட்கியா காட் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து பக்ரா ஆற்றில் விழுந்தது. (பி.டி.ஐ)
பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள சிக்டியில் 182 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் பெரும் பகுதி செவ்வாய்கிழமை மதியம் இடிந்து விழுந்தது.
பிரதமர் கிராமின் சதக் திட்டத்தின் கீழ் 12 கோடி ரூபாய் செலவில் தனியார் ஒப்பந்ததாரர்களால் பக்ரா ஆற்றின் மீது இந்த பாலம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.7.79 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, 2021 ஏப்ரலில் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஜூன் 2023 இல் நிறைவடைந்தது. பாலத்தின் இருபுறமும் அணுகுச் சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் விரைவில் திறக்கப்பட இருந்தது.
பாலத்தின் இரண்டு தூண்களுக்கு அருகில் தண்ணீர் சீராக செல்வதற்காக, சமீபத்தில் தோண்டியதால் தூண்கள் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தப் பாலத்தில் மொத்தம் 16 தூண்கள் இருந்தன.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் அறிக்கை கேட்டுள்ளார்.
பீகாரிலும் சமீபத்திய ஆண்டுகளில் மேலும் சில பாலங்கள் இடிந்து விழுந்தன.
மார்ச் 22 அன்று, கோசி ஆற்றின் மீது சுபாலில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் மூன்று அடுக்குகள் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். 10.5 கிமீ நீளமுள்ள இந்தப் பாலம் 2014-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஜூன், 2023 இல், கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட 200 மீட்டர் நீளம் கொண்ட அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலத்தின் மூன்று தூண்கள் இடிந்து விழுந்தது. கட்டுமானப் பணியின் கீழ் உள்ள கட்டிடத்தின் வழியாக பயணிகள் குறுகலாக தப்பினர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.