இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இரவு நேரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மகாராஷ்ட்ராவிற்கு வரும் நபர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன் கட்டாயமாகிறது.
மேலும் படிக்க : கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு; 28 வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகள் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த போது அதில் அதிகமாக பாதிப்பிற்கு ஆளானது மகாராஷ்ட்ரா மாநிலம் தான். எனவே புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளது அம்மாநில அரசு. இன்று முதல் ஜனவரி 5ம் தேதி இரவு நேரங்களில் வெளியே வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil