Advertisment

சரமாரியாக கேள்வி எழுப்பிய பங்குச் சந்தை புரோக்கர்: நிர்மலா சீதாராமன் பதிலால் வெடித்த சர்ச்சை

மும்பை பங்குச் சந்தை புரோக்கர் ஒருவர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, ‘உறங்கும் பார்ட்னரால்’ பதில் சொல்ல முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பதிலால் தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Nirmala Sitharamans Reply to Mumbai Brokers question criticised Tamil News

மும்பை பங்குச் சந்தை புரோக்கர் கேள்விக்கு, ‘உறங்கும் பார்ட்னர்’ பதில் - நிர்மலா சீதாராமன் கூறிய பதிலால் தற்போது புதிய சர்ச்சை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Nirmala Sitharaman: மும்பை பங்குச் சந்தையில் "விஷன் ஃபார் இந்தியன் ஃபைனான்ஸ் மார்க்கெட்ஸ்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குச் சந்தை முதலீடுகள், வரி விதிப்பு ஆகியவை குறித்து பங்குச்சந்தை புரோக்கர்களுடன் கலந்துரையாடினார்.

Advertisment

இந்த நிகழ்வில் பங்குச்சந்தை புரோக்கர் ஒருவர் மத்திய அரசின் வரி விதிப்பு முறை மக்களை கடுமையான இன்னலுக்கு உள்ளாக்குவது குறித்து மத்திய நிர்மலா சீதாராமனிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மேலும், நாட்டு மக்கள் பலர் மனதிலும் உள்ள கேள்விகளையும் அவர் அடுக்கினார். 

அந்தப் பங்குச் சந்தை புரோக்கர் நிர்மலா சீதாராமனிடம்"பங்குச் சந்தையில் நான் முதலீடு செய்கிறேன், நான் நிறைய ரிஸ்க் எடுத்து வருகிறேன். ஜி.எஸ்.டி, ஐ.ஜி.எஸ்.டி, எஸ்.டி.டி, முத்திரை வரி போன்ற நீண்ட கால ஆதாய வரிகளைச் செலுத்துகிறேன். ஆனால் என்னுடைய முழு லாபத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. மத்திய அரசுதான், பங்குச் சந்தை தரகர்களை விட அதிக பணம் சம்பாதிக்கிறது.

நான் எல்லாவற்றையும் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கிறேன். நான் வொர்க்கிங் பார்ட்னராக இருக்கிறேன். ஆனால் இந்திய அரசாங்கம் வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது.

ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னனென்ன. ஸ்டாம்ப் டியூட்டி, ஜி.எஸ்.டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்து ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு அதிக வரிவிதிப்பின் மூலம் பணம் பெறுவதை சுட்டிக்காட்ட அந்த புரோக்கர் அரசை ‘ஸ்லீப்பிங் பார்ட்னர்' (உறங்கும் பார்ட்னர்) என அழைத்தார். இந்த மேற்கோளை முன்வைத்தே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் தனது பதிலில், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. ‘உறங்கும் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது.” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். 

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தப் பதில் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வரி விதிக்கப்பட்டது முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் சரியான பதிலை கொடுத்திருக்க வேண்டும் என்பது போல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment