/tamil-ie/media/media_files/uploads/2017/11/z861.jpg)
கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வீடியோ மூலம் தாங்கள் பணம் கேட்டு மிரட்டப்படுவதாகவும், இது டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட பொய்யான வீடியோ என்றும் நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஏழு வருடங்களாக இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய திருப்பமாக, 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நித்தியானந்தா பாலியல் வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என டெல்லி தடயவியல் துறை இன்று உறுதி செய்துள்ளது.
More details awaited...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.