Advertisment

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி; கட்சி மாறிய 3 எம்.எல்.ஏ.-க்கள்!

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது, மூன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏக்கள் பிரஹலாத் யாதவ், நீலம் தேவி மற்றும் சேத்தன் ஆனந்த் ஆகியோர் என்டிஏ கூட்டணிக்கு மாறினர்.

author-image
WebDesk
New Update
Nitish Kumar Bihar

பீகார் மாநிலத்தில் நடந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சபையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 130-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisment

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி-யு), ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மகாபந்தனில் (மாபெரும் கூட்டணி) இருந்து நிதிஷ் குமார் வெளியேறி மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்தார்.

இதனால் அவரது அரசு நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்கொண்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, மூன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏக்கள் பிரஹலாத் யாதவ், நீலம் தேவி மற்றும் சேத்தன் ஆனந்த் ஆகியோர் என்டிஏ கூட்டணிக்கு மாறினர்.

இந்த நிலையில், சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், “15 ஆண்டுகளாக லாலு பிரசாத்-ராப்ரி தேவி அரசுகள் பீகார் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை" என்றார்.

இதற்கிடையில், இன்று நடைபெற்ற பீகார் சட்டசபை கூட்டத்தொடரில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறியது குறித்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அலோக் குமார் மேத்தா கூறுகையில், இது விசாரணைக்கு உட்பட்டது” என்றார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Nitish Kumar wins floor test, RJD walks out

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment