பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவை பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் "முக்கியமந்திரி" (முதலமைச்சர்) என்று வாய் தவறி கூறியதாக கூறப்படும் பேச்சு, பா.ஜ.க மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஜே.டி(யு) மற்றும் ஆர்.ஜே.டி இடையே செவ்வாய்க்கிழமை கிண்டல் மற்றும் கவுண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
நிதிஷ் குமார் ஆசிரமத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இது என்று முதல்வர் நிதிஷ் குமார் மீது பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கூட்டணி கட்சிகளான ஜே.டி(யு) மற்றும் ஆர்.ஜே.டி தங்கள் வளர்ந்து வரும் பிணைப்பை வெளிப்படுத்த "தவறுதலாக" வெளிப்பட்டது என்று கூறின.
இதையும் படியுங்கள்: பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அறிவிப்பு
கால்நடை மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை நிகழ்ச்சியில் மேடையில் மற்ற தலைவர்களை அறிமுகப்படுத்திய நிதிஷ் குமார், தனது துணை முதல்வரான தேஜஸ்வி யாதவை "மானிய முக்யமந்திரி (மாண்புமிகு முதல்வர்) தேஜஸ்வி பிரசாத் யாதவ்" என்று அழைத்தார். ஆனாலும், நிதிஷ் குமார் தனது “தவறுதலான வார்த்தை பிரயோகத்தை” சரி செய்யாமல், பேச்சை தொடர்ந்தார்.
நிதிஷ்குமாருக்கு நாக்கு நழுவிய வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக் கொண்ட, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், “நிதிஷ் குமார் உணர்வுபூர்வமாக அல்லது ஆழ்மனதில் தேஜஸ்வியை முதல்வராக ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. நிதிஷ் குமார் ஆசிரமத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இது,” என்று கூறினார்.
பா.ஜ.க.,வின் "ஆசிரமம்" பேச்சு கடந்த வாரம் மூத்த RJD தலைவர் சிவானந்த் திவாரியின் கருத்தில் இருந்து வந்தது, அவர் 70-க்கும் மேற்பட்ட வயது என்பது "ஆசிரமம் செல்லும் வயது", என்றார். இது நிதிஷ் குமாரை குறிக்கும் குறிப்பாக கருதப்படுகிறது.
இதனிடையே, "இது ஒரு சறுக்கலாக இருக்கலாம் (ஆனால்) நிச்சயமாக பீகாரின் வருங்காலத் தலைவராக இருக்கும் மருமகன் தேஜஸ்வி யாதவுக்கு நிதிஷ் குமாரின் ஆசீர்வாதமாக நாங்கள் கருதுகிறோம்," என்று சிவானந்த் திவாரி கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான பேச்சுக்களை நிராகரித்த ஜே.டி.(யு) தலைவர் ஒருவர், “ஒரு கணம் நாக்கு நழுவியதை பிடித்துக் கொண்டிருக்க கூடாது. அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் கூட ஒரு உரையின் போது பண்டிட் ஜவஹர்லால் நேருவை பிரதமர் என்று குறிப்பிட்டார். ஆர்.ஜே.டி உடனான எங்களது பிணைப்பை எண்ணி பா.ஜ.க பொறாமை கொள்ளட்டும்,” என்று கூறினார்.
மகா கூட்டணியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த "பந்தம்" முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் வட்டாரங்களில் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆகஸ்ட் மாதம் ஆட்சி அமைத்த உடனேயே, முதல்வர் பதவிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு துணை முதல்வருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மூத்த அதிகாரிகளிடம் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. பீகார் அரசியலில் "மாமா மற்றும் மருமகன்" இடையேயான நட்புறவு இந்த முறை தெளிவாகத் தெரிகிறது, பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளுக்கு தேஜஸ்வியுடன் நிதிஷ் குமார் சென்று வருகிறார்.
செப்டம்பர் 17 அன்று போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோயல்வாரில் ஒரு மருத்துவமனையில் ஒரு புதிய கட்டிடத்தைத் திறக்கும் போது, நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் சேர்ந்து தனித்தனி ரிப்பன்களை வெட்டினர். ஆளும் கூட்டணியின் மூத்த பங்காளியான ஆர்.ஜே.டி.,யின் தலைவருக்கு "சமத்துவம்" கொடுக்க இது சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் இது நிதிஷின் முன்னாள் பா.ஜ.க பிரதிநிதிகளான சுஷில் குமார் மோடி, தர்கிஷோர் பிரசாத் அல்லது ரேணு தேவி ஆகியோருக்கு ஒருபோதும் நடக்காத ஒன்று.
செப்டம்பர் 9 அன்று, கயாவில் பித்ரிபக்ஷ் மேளாவைத் தொடங்கிவைத்து, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, “நிதிஷ் குமார் நாட்டை வழிநடத்துவார், தேஜஸ்வி பீகாரை வழிநடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி, நிதிஷ் குமாரின் கீழ் மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், துணை முதல்வராக இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார், மீண்டும் மகா கூட்டணி-1 இன் பிளேபுக்கில் இருந்து, இளம் ஆர்.ஜே.டி தலைவரைப் பார்த்தபோது ஒரு பெரிய பாத்திரத்திற்கு தயாராகி வருகிறார் என்று தெரிகிறது.
மற்ற தலைவர்களுடனான முறைசாரா உரையாடலின் போது கூட, நிதீஷ் குமார் தேஜஸ்வியை பீகாரின் வருங்காலத் தலைவர் என்று அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
நாக்கு நழுவல் மற்றும் அரசியல் பிரவேசங்கள் தவிர, தேஜஸ்வி யாதவ் பீகாரின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு குறிப்பிட்ட காலத்தை மட்டுமே RJD பார்க்கிறது. லாலு பிரசாத் கட்சி தேசிய அரசியலில் நிதிஷ் குமார் இன்னும் தீவிரமாக செயல்படுவதற்கு மட்டுமே காத்திருக்கிறது. தேஜஸ்விக்கு எதிராக நிலுவையில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் நிலம் வழங்கினால் வேலை ஆகிய வழக்குகள் மட்டுமே ஆர்.ஜே.டி.,யை கவலையடையச் செய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.