Advertisment

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சுயேச்சை எம்.எல்.ஏ கடிதம்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி சட்டமன்ற செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கடிதம்‌ அளித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
No confidence motion against Speaker puducherry Independent MLA G Nehru letter to assembly secretary Tamil News

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி சட்டமன்ற செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கடிதம்‌ அளித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கடிதம் கொடுத்தார்.

Advertisment

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேரு எம்.எல்.ஏ, "சட்ட விதிமுறைகள் மீறி சபாநாயகர் செல்வம் தொடர்ந்து செயல்படுகிறார். அனைத்து அரசு விழாக்களிலும் தன்னை அழைக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி பங்கேற்பது, சபாநாயகர் பதவியை அவமதிக்கும் செயல்.

சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என தொடர்ந்து எதிர்க் கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில்,இந்த வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சபாநாயகர் மீது அதிருப்தியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை பயன்படுத்தி அவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Puducherry Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment