/indian-express-tamil/media/media_files/gLOgk01n1x7iySCvpFfS.jpg)
ஆசிரியர்களுக்கான ஆடைக் குறியீட்டை வெளியிட்டது மகாராஷ்டிரா அரசு
முதல்கட்டமாக மகாராஷ்டிரா அரசு, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்துள்ளது. விதியின்படி, ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்கள், அடர் நிறம் அல்லது டிசைன்ஸ் அல்லது பிரிண்ட்கள் உடைய ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண் ஆசிரியர்கள் சல்வார் அல்லது குர்தா மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அல்லது சேலை அணிய வேண்டும், அதேசமயம் ஆண் ஆசிரியர்கள் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து, சட்டையை டக்-இன் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: No jeans and t-shirts, wear salwar or churidar: Maharashtra govt issues dress code for teachers
பள்ளிக் கல்வித் துறையால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாணையில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஈர்க்கக்கூடியவர்களாக இருப்பதாலும் மற்றும் ஆசிரியர்கள் பொருத்தமற்ற ஆடைகள் அணிவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், ஆசிரியர்கள் அணியும் உடைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் குறியீடு தொடர்பான ஒன்பது அம்ச வழிகாட்டுதல்களை பட்டியலிட்டுள்ள அரசாணையின்படி, இது வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொது அல்லது தனியார் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அதேநேரம், ஆசிரியர்களும் கல்வியாளர்களும் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர், மேலும் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “ஆசிரியர்கள் தகுந்த உடை அணிவதில் ஏற்கனவே விழிப்புடன் உள்ளனர். பள்ளிகளும் தங்கள் சொந்த வழிகளில் அதை உறுதி செய்வதில் கவனமாக இருக்கின்றன. அரசு தலையிட்டு ஆசிரியர்களுக்கான ஆடைக் குறியீட்டை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் கூற்றுப்படி, என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களின் தனிப்பட்ட மற்றும் உள்ளூர் உரிமை.
இருப்பினும், துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இவை வழிகாட்டுதல்கள் மற்றும் ஆணைகளாக கருதப்படக்கூடாது. மீறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்றார்.
ஆசிரியர்களுக்கு Tr. குறிச்சொல்
மருத்துவர்களுக்கு "Dr", வழக்கறிஞர்களுக்கு "Adv" என குறிச்சொல் இருப்பதைப் போல், ஆசிரியர்கள் இப்போது தங்கள் பெயருக்கு முன் "Tr" என்பதை முன்னொட்டாக எழுதுவார்கள். மாநில பள்ளிக் கல்வித் துறையின் இந்த முடிவு, ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அவர்களின் மன உறுதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான ஆணையர் அலுவலகம் அதற்கான அடையாளத்தை இறுதி செய்யும் பணியையும், அதற்கான போதிய விளம்பரத்தையும் வழங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.