No new schemes this year except proposals under special COVID-crisis packages : கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வந்த காரணத்தால் இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சில இடங்களில் முக்கிய பணிகளுக்காக மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisment
மேலும் இந்திய பொருளாதாரத்தை சீர் செய்ய சிறப்பு பொருளாதார அறிவிப்புகளாக காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் இது தொடர்பான தேவைகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காகவே நிதி அனைத்தும் செலவு செய்யப்ப்பட்டு வருவதால் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களுக்கு நிதி தேவை என்று நிதி அமைச்சகத்திற்கு மற்ற துறை அமைச்சர்கள் கோரிக்கை விடுப்பதை கைவிட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil