ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், 2024 மக்களவையில் பிரதமர் தொடர்பான கேள்விக்கு மீண்டும் தன் பாணியிலே பதிலளித்தார்.
அப்போது, எவர் பிரதமரானாலும் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது" என்றார். தொடர்ந்து, “மனைவி இல்லாமல் பிரதமர் இல்லத்தில் தங்குவது தவறு. இதை ஒழிக்க வேண்டும்” என்றார்.
கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடினர். அப்போது ராகுல் காந்தியிடம், “நீங்கள் உங்கள் அம்மா பேச்சை கேட்க வேண்டும்.
இன்னமும் காலம் உள்ளது, நீங்கள் தாரளமாக திருமணம் செய்துக்கொள்ளலாம் என ராகுல் காந்தியை பார்த்து கேட்டார்.
அதற்கு ஆமோதிப்பது போல் ராகுல் காந்தியும் பதில் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் மனைவி பற்றிய விவாதத்தை நகைச்சுவை உணர்வோடு லாலு பிரசாத் யாதவ் எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் எத்தனை தொகுதிகளை வெல்லும் என்ற கேள்விக்கு, “300 சீட்டுகள்” எனப் பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“