ஒடிசா ரயில் விபத்து; காரணமானவர்களுக்கு கடும் தண்டனை – மோடி உறுதி

ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

author-image
WebDesk
New Update
modi odisha

பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, ஜூன் 3, 2023 பார்வையிடுகிறார். (புகைப்படம்: Twitter/@BJP4India)

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி “விபத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

Advertisment

நேற்றிரவு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலின் பாதையில் சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு, அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்ததில் குறைந்தது 288 பேர் இறந்தனர் மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலசோர் அருகே பஹானகா பஜாரில் விபத்து நடந்த இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிவடைந்து, மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒடிசா ரயில் விபத்து; சிக்னல் கோளாறு காரணமாக இருக்கலாம்

இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்தார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், மூன்று ரயில் விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பாலசோரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி, “காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசாங்கம் எந்தக் கல்லையும் தவற விடக்கூடாது” என்று கூறினார்.

"இது ஒரு வேதனையான சம்பவம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு எந்தக் கல்லையும் தவற விடக் கூடாது. இது ஒரு தீவிரமான சம்பவம், ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன்," என்று ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை பாலசோரில் சந்தித்த பின்னர் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், நேற்றிரவு இங்கு நிகழ்ந்த மூன்று ரயில் விபத்துகளில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உறுதியளித்தார்.

மேலும், "இந்த சோகத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம். இரவு முழுவதும் உழைத்த பலருக்கும், மக்களை மீட்பதில் அனைத்து உதவிகளைச் செய்த உள்ளூர் மக்களுக்கும் நன்றி. வலியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, இந்த சூழ்நிலையை சமாளிக்க எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு வலிமை தரட்டும். உயிரிழந்த குடும்பங்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து பெற வேண்டும்” என்றும் மோடி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Modi Odisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: