Advertisment

கட்சிகள், தலைவர்களின் பதிவுகளை நீக்க உத்தரவு: தேர்தல் ஆணையத்துடன் உடன்படாத எக்ஸ் தளம்

தேர்தல் நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் அரசியல் பேச்சு அடங்கிய சில பதிவுகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதனை நீக்கி இருப்பதாக எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
On Election Commission orders X takes down posts of parties  leaders but disagrees Tamil News

நாடாளுமன்ற மக்களைத் தேர்தலை ஒட்டி எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான 'எக்ஸ்' சமூக ஊடக தளத்திற்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Election Commission | நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19 ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களைத் தேர்தலை ஒட்டி எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான 'எக்ஸ்' சமூக ஊடக தளத்திற்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. முதலில் அதனை ஏற்க மறுத்த 'எக்ஸ்' தள நிர்வாகம் பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டது. அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை, தேர்தல் நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் அரசியல் பேச்சு அடங்கிய சில பதிவுகளை நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: On EC orders, X takes down posts of parties & leaders, but disagrees

ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் துணை முதல்வரும் மாநில பா.ஜ.க தலைவருமான சாம்ராட் சவுத்ரி ஆகியோரின் பதிவுகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக எக்ஸ் வலைதள பக்கம் வெளியிட்ட அறிக்கையில்,“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து பகிரப்பட்ட அரசியல் பேச்சுகளைக் கொண்ட பதிவுகளை நீக்க வேண்டும் என எக்ஸ் தளத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளுக்கு இணங்க, எஞ்சிய தேர்தல் காலத்தில் இந்தப் பதவுகளை நிறுத்தி வைத்துள்ளோம்; எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளுடன் நாங்கள் உடன்படவில்லை. 

மேலும் கருத்துச் சுதந்திரம் கொண்ட பதிவுகளுக்கும், பொதுவாக அரசியல் பேச்சுக்கும் அனுமதி நீட்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.தேர்தல் ஆணையத்தின் அனைத்து நீக்குதல் உத்தரவுகளையும் முன்னோக்கி வெளியிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக கருத்து கேட்க இந்திய தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளரை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட நிலையில், அவர்கள் தரப்பில் யாரும் பதிலளிக்கவில்லை.

ஏப்ரல் 2 அன்று பதிவுகளை நீக்குதல் தொடர்பான கோரிக்கையில், வேட்பாளர்கள் அல்லது தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான விமர்சனம் மற்றும் சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விமர்சனம் செய்ததற்கு எதிரான தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒய்.எஸ்.ஆர்.சி.பி, மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தலா ஒரு பதிவை நீக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் தனித்தனியான கோரிக்கைகளில், அதேதேர்தல் நடத்தை விதிகளை  மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் சௌத்ரியின் பதிவுகள் முறையே நீக்கப்பட வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன் மார்ச் 1 அறிவுரையை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

ஏப்ரல் 4 அன்று எக்ஸ் வலைதளக்கு தேர்தல் ஆணைய அதிகாரி அனுப்பிய மின்னஞ்லிசல் 4 பதிவுகளை மேற்கோள் காட்டினார். “இவை இந்திய தேர்தல் ஆணையத்தின் மட்டத்தில் உள்ள பிரத்யேக நோடல் அலுவலரால் எக்ஸ் தளத்தின் சட்ட அறிக்கையிடல் போர்டல் மூலம் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டன... 'தன்னார்வ நெறிமுறைகளின்' கீழ் செய்யப்பட்ட உறுதிமொழிகளின்படி, பங்கேற்பாளர் தளங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட செல்லுபடியாகும் சட்டக் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் தளங்களை தவறாக பயன்படுத்தாமல் பாதுகாப்பதற்கு போதுமான ஏற்பாட்டை செய்யுங்கள்” என்று தேர்தல் ஆணையம் எழுதியது.

மக்களைவை தேர்தல் நடந்து கொண்டிருந்த 2019 மார்ச் 20 அன்று, சமூக ஊடக தளங்களும், இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவும் தன்னார்வ நெறிமுறைக் குறியீட்டைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment