/indian-express-tamil/media/media_files/2025/03/20/f8wuUNZubto0v6WJP32s.jpg)
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் வியாழக்கிழமை நடந்த இரண்டு என்கவுன்டர்களில் ஒரு ஜவான் மற்றும் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தண்டேவாடா எல்லைக்கு அருகிலுள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடுகளில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை (20.03.2025) காலை 7 மணிக்கு நடவடிக்கை மேற்கொண்டபோது ஒரு என்கவுன்ட்டர் நடந்தது.
இந்த என்கவுன்ட்டரில் மணிக்கணக்கில் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பஸ்தர் ரேஞ்ச் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் பி தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் பிஜாப்பூர் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ஒரு ஜவான் (DRG) மற்றும் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். “வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை நாங்கள் மீட்டுள்ளோம். தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்று அந்த அதிகாரி கூறினார்.
மற்றொரு என்கவுன்ட்டரில், நாராயண்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில், பஸ்தார் பிராந்தியத்தில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
“அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கான்கர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.ஜி மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கூட்டுக் குழு தேடுதல் நடவடிக்கைக்காகப் புறப்பட்டது” என்று கான்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ கல்யாண் எலெசேலா தெரிவித்தார். சோட்டெபெதியா காவல் நிலையத்தின் கீழ் உள்ள கொரோஸ்கோடோ கிராமத்திற்கு அருகில் இந்த என்கவுன்ட்டர் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 4 மாவோயிஸ்டுகளிடமிருந்து ஒரு தானியங்கி துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காடுகளில் வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் கிளர்ச்சியாளர்கள் ஒரு ஐ.இடி வெடிபொருள் வெடிப்பு ஏற்பட்டது.
“இந்த குண்டுவெடிப்பு காரணமாக, பாதுகாப்பு படை வீரர் மற்றும் ஒரு அதிகாரியின் கண்களில் தூசி படிந்தது. இருவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர்” என்று ஒரு அதிகாரி கூறினார். உயிரிழப்பு எதுவும் இல்லை, நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டர்களில் 105 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். அதே, காலகட்டத்தில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய வன்முறைகளில் 13 பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.