முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Cabinet clears one nation, one election proposal
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றார். முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படும். 2வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல், முதல் கட்டத் தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் நடத்தப்படும்.
லோக்சபா தேர்தல் 2024 அறிவிக்கப்படுவதற்கு சற்று முன், மார்ச் மாதம் ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த குழு, அரசு ஒரு முறை இடைக்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் 2024 அறிவிக்கப்படுவதற்கு சற்று முன், மார்ச் மாதம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை அரசிசம் சமர்ப்பித்தது. இந்த குழு அரசு ஒரு முறை இடைக்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசு உடனடியாக ஒரு நியமிக்கப்பட்ட தேதியை அடையாளம் காண வேண்டும் என்றும் அரசாங்கம் ஒரு முறை இடைநிலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் தேர்தல் சுழற்சியை ஒத்திசைத்து ஒரே நேரத்தில் தேர்தல்களை மீண்டும் கொண்டு வரும்.அதன்பின், இரண்டாவது நடவடிக்கையாக, லோக்சபா மற்றும் மாநிலங்களவை தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல் நடத்த வேண்டும்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம், தொங்கு சபை அல்லது வேறு ஏதேனும் நிகழ்வு காரணமாக நாடாளுமன்றம் அல்லது மாநிலங்களவை முன்கூட்டியே கலைக்கப்படுவதால் ஒத்திசைவு சீர்குலைந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒரே நேரத்தில் தேர்தலின் அடுத்த சுழற்சி வரும் வரை, மீதமுள்ள காலப்பகுதிக்கு அல்லது காலாவதியான காலத்திற்கு மட்டுமே புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
லோக்சபாவில் பா.ஜ.க-வின் எண்ணிக்கை குறைந்த போதிலும் , தற்போதைய என்.டி.ஏ அரசு நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அதன் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் 100 நாட்களில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தற்போதைய ஆட்சியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்த ஆண்டு செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையின் போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“