கேரளாவில் பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை (மே 16) தெரிவித்துள்ளது. இதனால், இந்தாண்டு ஜூன் 4ஆம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக கேரளத்தில் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். 4 மாதங்கள் நீடிக்கும் இந்தப் பருவமழை நாட்டின் ஒட்டுமொத்த மழையில் 75 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் கேரளத்தில் பருவமழை கடந்த 5 ஆண்டுகளாக சரியான தேதிக்கு பொழியவில்லை. ஒரு முறை மட்டுமே தேதிக்கு சரியாக பெய்துள்ளது.
தொடர்ந்து, 2018 மற்றும் 2022ஆம் தேதிகளில் 2 நாளுக்கு முன்னதாக பருவமழை பெய்தது. அடுத்து 2019 மற்றும் 2021ல் சில நாள்களுக்கு பின்பு இது நடந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“