Advertisment

400 எம்.பி.,க்கள் முழக்கத்தை எதிர்கட்சிகள் தவறாக சித்தரித்தன; சீட் ஒதுக்கீட்டிலும் தவறு - ராஜஸ்தான் அமைச்சர்

சீட் ஓதுக்கீட்டில் சிக்கல் இருந்தது; 400 எம்.பி.,க்கள் என்ற முழக்கம் எதிர்கட்சிகளால் தவறாக பரப்பப்பட்டது; தேர்தல் முடிவுகள் குறித்து ராஜஸ்தான் பா.ஜ.க அமைச்சர் கருத்து

author-image
WebDesk
New Update
jabhar singh

ராஜஸ்தான் அமைச்சர் ஜாபர் சிங் கர்ரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Hamza Khan

Advertisment

ராஜஸ்தான் அமைச்சர் ஜாபர் சிங் கர்ரா வியாழனன்று, ராஜஸ்தானில் லோக்சபா தேர்தலில் கட்சியின் செயல்திறன் குறைவானதற்கு, "விவசாயிகள் போராட்டம் மற்றும் டிக்கெட் (சீட் ஒதுக்கீடு) விநியோகத்தில் தவறுகள்" உட்பட பல காரணிகள் காரணம் என்று கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:

ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சரான (சுயேச்சைப் பொறுப்பு) ஜாபர் சிங் கர்ரா, “400 எம்.பி.,க்கள் என்ற முழக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பிய தவறான கருத்துக்களை எங்களால் அகற்ற முடியவில்லை. விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கம் இருந்தது, டிக்கெட் விநியோகத்தில் தவறுகள் இருந்தன, தாக்கத்தை ஏற்படுத்திய மேலும் பல விஷயங்கள் இருந்தன,” என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே போன்ற தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, ‘நிறைய விஷயங்கள்’ என்று கூறும்போது அனைத்தும் அதில் அடங்கியுள்ளது என்று ஜாபர் சிங் கர்ரா கூறினார்.

ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்ட முடிவுகளில், ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களில் பா.ஜ.க 14 இடங்களை வென்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் 8 மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. கடந்த இரண்டு தேர்தல்களில் முறையே 25 இடங்களிலும் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றன.

"எங்களிடம் உள்ள குறைபாடுகளை நாங்கள் சுயபரிசோதனை செய்து சரிசெய்வோம்," என்று ஜாபர் சிங் கர்ரா கூறினார், "நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகளை அடுத்து அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்த கேள்விக்கு, அது சாத்தியமாகத் தெரியவில்லை என்று ஜாபர் சிங் கர்ரா கூறினார்.

தோல்விக்கான பொறுப்புக்கூறல் குறித்த கேள்விக்கு, அனைத்து பா.ஜ.க தொண்டர்களும் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். "இது ஒரு கூட்டுப் பொறுப்பு, தனிப்பட்ட பொறுப்பு அல்ல," என்று ஜாபர் சிங் கர்ரா கூறினார்.

கேபினட் அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பொறுப்பில் உள்ள இடங்களில் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்ததால் விலகுவதாகக் கூறியதன் பேரில், கிரோடி லால் மீனாவை அமைச்சரவையில் தொடர்வதை உறுதி செய்ய முயற்சிப்போம் என்று ஜாபர் சிங் கர்ரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Rajasthan Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment