மோடி மீதான விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே பதில் – பா.ஜ.க தீர்மானம்

“பிரதமரின் எண்ணம் தெளிவடைந்து விட்டது... நாட்டுக்காக உழைக்கும் ஒரு அழியாத தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்படுகிறார்” - நிர்மலா சீதாராமன்

“பிரதமரின் எண்ணம் தெளிவடைந்து விட்டது... நாட்டுக்காக உழைக்கும் ஒரு அழியாத தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்படுகிறார்” - நிர்மலா சீதாராமன்

author-image
WebDesk
New Update
மோடி மீதான விமர்சனங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே பதில் – பா.ஜ.க தீர்மானம்

Liz Mathew 

Advertisment

"பிரதமரை தனிப்பட்ட முறையில் காயப்படுத்த" எதிர்க்கட்சிகள் "எதிர்மறையான பிரச்சாரத்தை" நடத்துவதாக குற்றம் சாட்டிய பா.ஜ.க, திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட அதன் அரசியல் தீர்மானத்தில், "பிரச்சினைகள்... உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ பதிலால் நிராகரிக்கப்பட்டன,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

"எதிர்க்கட்சிகள் எதிர்மறையான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன, அதில் மோசமான வார்த்தை மற்றும் எதிர்மறை தொனி ஆகியவை பிரதமரை தனிப்பட்ட முறையில் சேதப்படுத்துபவை. ரஃபேல் விவகாரம், பணமதிப்பு நீக்கம், அமலாக்க இயக்குநரகத்தின் பணமோசடி வழக்குகள், மத்திய விஸ்டா திட்டம் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு என, இந்தப் பிரச்னைகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்பூர்வ பதிலால் நிராகரிக்கப்பட்டன. அரசியல் தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த விவகாரங்களில் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: 2023-ல் 9 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள்: நிர்வாகிகள் கூட்டத்தில் நட்டா பேச்சு

Advertisment
Advertisements

“நாட்டின் நலனுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தீர்மானம் கூறுகிறது. “பிரதமரின் எண்ணம் தெளிவடைந்து விட்டது... நாட்டுக்காக உழைக்கும் ஒரு அழியாத தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்படுகிறார்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய சட்ட அமைச்சரும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவருமான கிரண் ரிஜிஜுவால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்மானம், உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் மூத்த கர்நாடக அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது, மேலும் மோடி "உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியதற்காக" பாராட்டப்பட்டது.

அக்கட்சியின் குஜராத் சட்டமன்ற வெற்றியை பாராட்டி, "ஆட்சிக்கு எதிரான நிலையை ஆட்சிக்கு ஆதரவாக மாற்றிய", அந்த முடிவுகள் வரவிருக்கும் தேர்தல்களில் "தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று தீர்மானம் குறிப்பிட்டது. குஜராத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது.

மன் கி பாத் போன்ற அரசியல் சாராத தளங்கள் மூலம் சாமானிய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பாலம் அமைப்பதில் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று தீர்மானம் கூறியது. திரங்கா யாத்திரை பிரச்சாரம் மற்றும் காசி தமிழ் சங்கமம் ஆகியவற்றின் "வெற்றியை" தீர்மானம் பாராட்டியது. “கலாச்சார மற்றும் ஆன்மீகப் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதில் பிரதமரின் பங்கு நிலையானது, மேலும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் அவரது பங்கு பாராட்டப்பட்டது,” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவின் பங்களிப்பையும் அரசியல் தீர்மானம் பாராட்டியது. ஒரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கூட்டத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை என்றார். ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு ஓராண்டு நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வரவிருக்கும் ஒன்பது மாநில தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் தயாரிப்புகள் குறித்து விவாதிக்க பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழு இரண்டு நாட்களுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் கூடுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: