Advertisment

இந்தியா-சீனா மோதல் குறித்து சிதம்பரம்: ராஜ்நாத் சிங் வெளியிட்டது வெற்று அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவைக் குறிப்பிடக் கூட பயப்படுகிறார் என்று ம், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதித்திருக்க வேண்டும்- காங்கிரஸ் தலைவர் சிதம்பரம்

author-image
WebDesk
New Update
'Callous' budget that has betrayed hopes of people: P Chidambaram

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் இது வெற்று அறிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான ப சிதம்பரம் கூறினார். இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ப சிதம்பரம் அளித்த பேட்டி.

Advertisment

சீனாவின் புதிய அத்துமீறல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

நிச்சயமாக இல்லை. இன்று காலை நாளிதழ்களில் வந்ததைத் தவிர அவர் எதுவும் கூறவில்லை. காலை 6 மணிக்கு செய்தித்தாள்களில் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. மதியம் 12.30 மணியளவில் அவர் நமக்கு அளித்த கூடுதல் தகவல் என்ன? உண்மையில், இது முற்றிலும் ஒரு வெற்று அறிக்கை. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களில் எதுவும் சேர்க்கப்படவில்லை.

நீங்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கம் கேட்க விரும்பினீர்கள். நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?

ஊடுருவும் தேதி, நேரம் மற்றும் இடத்தை சீனா தேர்வு செய்வது எப்படி நடக்கும் என்று நான் கேட்டிருப்பேன். மேலும் இது நடப்பது முதல் முறை அல்ல. இது 2020 இல் கல்வானில் நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஊடுருவலிலும் சீனா தேர்வு செய்த நேரம், இடம் மற்றும் தேதியில்தான் நடந்துள்ளது. அப்படியென்றால், இந்த கால இடைவெளியில் ஊடுருவல்களில் இருந்து சீனாவைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

சீனாவின் அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இதைப் பற்றி பேசவே அஞ்சும் அளவுக்கு அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. சீனா என்ற சொல்லைக் குறிப்பிடவே பயப்படுகிறார்கள். சீனா என்ற வார்த்தையை பிரதமர் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தபோது என்ன நடந்தது என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் பலமுறை ஜின்பிங்கை சந்தித்துள்ளார். கடைசி சந்திப்பு ஜி20 மாநாட்டில் நடந்தது. அவர் அங்கு ஜின்பிங் உடன் இருந்தார், அவர்கள் ஒரே அறையில் இருந்தனர். சீனா என்ற வார்த்தையை பிரதமர் குறிப்பிடவில்லை, மேலும் ஊடுருவல்கள் பற்றி அவர் ஜின்பிங்கிடம் என்ன சொன்னார் என்பதை அவர் விளக்கவில்லை. ஊடுருவல்கள் பற்றி அவர் ஜியிடம் ஏதாவது சொன்னாரா இல்லையா? என்பதுதான் கேள்வி.

இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இது முற்றிலும் தவறு. கடந்த காலங்களில் அமைச்சர் ஒருவர் ராஜ்யசபாவில் கருத்து தெரிவித்ததை அடுத்து விவாதங்கள் நடந்தன. உதாரணமாக, பி வி நரசிம்ம ராவ் காலத்தில் ‘வாக்கிற்கான பணப் பரிமாற்றம்’ பற்றி விவாதம் நடந்தது. இரண்டாவதாக, அன்னா ஹசாரே இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது, ​​ராஜ்யசபாவில் ஒரு அறிக்கைக்குப் பிறகு ஏழு மணி நேரம் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் 27 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீண்டும், அமைச்சரின் அறிக்கைக்கு பிறகு லோக்பால் குறித்து ராஜ்யசபாவில் முழு விவாதம் நடந்தது. எனவே, ஒரு அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகு முழு விவாதத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று எடுத்துக்காட்டுகள் உள்ளன. இப்போது, ​​ அமைச்சர் ஒருவரின் அறிக்கைக்குப் பிறகு விவாதிக்க முடியாது என்று எப்படி கூறுகிறீர்கள்.

இது ஒரு உணர்வுப்பூர்வமான எல்லைப் பிரச்சினை என்பது பிரதமரின் வாதம்.

இது மிகவும் உணர்ச்சிகரமான எல்லைப் பிரச்சினையாக இருந்தால், மூடிய கதவு அமர்வை (closed-door session) நடத்துங்கள். நாடாளுமன்றத்தின் கேமரா அமர்வை நடத்துங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், எதிர்க்கட்சித் தலைவர்களை - குறைந்தபட்சம் பெரிய கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களை அழைக்கவும்.பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று ப சிதம்பரம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment