‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ தவறான வழி... அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி உயிரையே கொடுத்தார் - ப. சிதம்பரம்

பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜாவின், ‘மேடம், அவர்கள் உங்களை சுடுவார்கள்’ என்ற புத்தகம் பற்றிய விவாதத்தை நெறிப்படுத்தும்போது முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜாவின், ‘மேடம், அவர்கள் உங்களை சுடுவார்கள்’ என்ற புத்தகம் பற்றிய விவாதத்தை நெறிப்படுத்தும்போது முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Chidambaram 2

இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் நடந்த குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில், பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜாவின் ‘மேடம், அவர்கள் உங்களை சுடுவார்கள்’ (They Will Shoot You, Madam) என்ற புத்தகம் பற்றிய விவாதத்தை நெறிப்படுத்தும்போது முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். Photograph: (Express Photo)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜூன் 1984-ல் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் இருந்து போராளிகளை வெளியேற்ற ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை – ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் – என்பது  ‘தவறான வழி’ என்றும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி “அந்தத் தவறுக்காகத் தன் உயிரையே கொடுத்தார்” என்றும் சனிக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள குஷ்வந்த் சிங் இலக்கிய விழாவில், பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜாவின் ‘மேடம், அவர்கள் உங்களை சுடுவார்கள்’ (They Will Shoot You, Madam) என்ற புத்தகம் பற்றிய விவாதத்தை நெறிப்படுத்தும்போது முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்த இந்திரா காந்தியின் முடிவிற்காக அவர் தன் உயிரையே கொடுத்தார் என்று பாவேஜா கூறியதற்கு சிதம்பரம் பதிலளித்தார்.

ப. சிதம்பரம் கூறுகையில், “இங்குள்ள எந்த ராணுவ அதிகாரியையும் நான் அவமதிக்கவில்லை, ஆனால் பொற்கோயிலை மீட்டெடுக்க அது ஒரு தவறான வழி. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொற்கோயிலை மீட்டெடுப்பதற்கான சரியான வழியை நாங்கள் காட்டினோம்... ப்ளூ ஸ்டார் ஒரு தவறான வழி, திருமதி இந்திரா காந்தி அந்தத் தவறுக்காகத் தன் உயிரைக் கொடுத்தார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். இருப்பினும், இந்த நடவடிக்கை ராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் சிவில் சேவை ஆகியோரின் கூட்டு முடிவாகும் என்றும் அவர் மேலும் கூறினார். “நீங்கள் திருமதி இந்திரா காந்தியை மட்டும் குறை சொல்ல முடியாது. நீங்கள் சொல்வீர்களா?” என்று அவர் பாவேஜாவிடம் கேட்டார்.

Advertisment
Advertisements


விவாதத்தின் பின்னர், பஞ்சாபின் பொருளாதார நிலைமைதான் தற்போதுள்ள "உண்மையான பிரச்சனை" என்று ப. சிதம்பரம் கூறினார்.

“நான் பஞ்சாபிற்குச் சென்றபோது, காலிஸ்தான் மற்றும் பிரிவினைக்கான அரசியல் குரல் நடைமுறையில் அடங்கிவிட்டது என்றும், அங்குள்ள உண்மையான பிரச்னை பொருளாதார நிலைமைதான் என்றும் நான் நம்புகிறேன்... பெரும்பாலான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள்தான்” என்றும் அவர் மேலும் கூறினார்.

P Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: