”பத்மாவதி குறித்து அரசு பதவிகளில் இருப்பவர்கள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்”: உச்சநீதிமன்றம் அதிரடி

அரசு துறைகளில் உயர்பதவி வகிப்பவர்கள் பத்மாவதி திரைப்படம் குறித்து கருத்து தவிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு துறைகளில் உயர்பதவி வகிப்பவர்கள் பத்மாவதி திரைப்படம் குறித்து கருத்து தவிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
padmavati-film-of-deepika-padukone-nice-hd-picture

அரசு துறைகளில் உயர்பதவி வகிப்பவர்கள் பத்மாவதி திரைப்படம் குறித்து கருத்து தவிர்ப்பதை தவிர்க்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

நடிகை தீபிகா படுகோனே நடித்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்த திரைப்படத்தில், ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜ புத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் தீபிகோ படுகோனே நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்துத்துவ அமைப்புகள் படத்தின் வெளியீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டிசம்பர் 1-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்தார்.

இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்க வேண்டும் என, மனோஹர் லால் சர்மா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,

பத்மாவதி திரைப்படம் குறித்து திரைப்பட தணிக்கை வாரியம் இறுதியான முடிவு எடுக்காத நிலையில், அரசு துறையில் உயர்பதவி வகிப்பவர்கள் இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய கருத்து தணிக்கை வாரியம் முன்முடிவு எடுக்க துணைபுரிவதாக அமையலாம். அவ்வாறு கருத்து தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பாகும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக, இத்திரைப்படத்தை தங்கள் மாநிலங்களில் திரையிட மாட்டோம் என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் கூறியிருந்தனர். இந்நிலையில், அரசு பதவிகளில் இருப்பவர்கள் இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Padmavati

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: