New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/23/hhPMFcwizKNxVPt3qzMw.jpg)
தெற்கு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பிறகு பாதுகாப்புப் படையினர் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். (புகைப்படம்: ஏபி)
Pahalgam Terrorist Attack Details: தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பிறகு பாதுகாப்புப் படையினர் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். (புகைப்படம்: ஏபி)
Pahalgam Attack Update: வடக்கு காஷ்மீரின் உரி செக்டாரில் ஞாயிற்றுக்கிழமை ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராணுவத்தினர் மற்ற ஊடுருவல்காரர்களைத் தேடி வருவதால் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை, தெற்கு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் குதிரை வண்டிக்காரர்களும் கொல்லப்பட்டனர்.
“பாதுகாப்புப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது, 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படைகளால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போர் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று ராணுவத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு சார்ந்த சினார் கார்ப் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் உள்ள ஒரு நீரோடை வழியாக பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் குழுவை புதன்கிழமை அதிகாலை ராணுவம் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கியது. துருப்புக்கள் ஊடுருவல்காரர்களை எதிர்த்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
“ஏப்ரல் 23, 2025-ல், சுமார் 2-3 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் உரி நாலா, பாரமுல்லாவில் உள்ள சர்ஜீவன் பகுதியில் ஊடுருவ முயன்றனர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (எல்.ஓ.சி) விழிப்புடன் இருந்த துருப்புக்கள் அவர்களை எதிர்த்து தடுத்து நிறுத்தினர், இதன் விளைவாக துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது” என்று ராணுவம் தெரிவித்துள்ளது. “இந்த நடவடிக்கை செயலில் உள்ளது.”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.