Advertisment

பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல்: எஃப்.ஐ.ஆர் நகல், நீலம் ஆசாத்தைச் சந்திக்க அனுமதி கோரி பெற்றோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நாடாளுமன்ற வண்ண புகை வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத்தை சந்திக்க பெற்றோர் முயற்சி; எஃப்.ஐ.ஆர் நகலை பெறவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

author-image
WebDesk
New Update
neelam azad

நாடாளுமன்ற வண்ண புகை வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: தாஷி டோப்கியால்)

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நீலம் ஆசாத்தின் பெற்றோர், அவரைச் சந்திக்க அனுமதி கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆர்) நகலையும் பெற முயன்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Parliament security breach: Neelam Azad’s parents move court seeking copy of FIR, permission to meet her

இந்த கோரிக்கையின் பேரில் கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

மனுவின்படி, நீலம் ஆசாத்தின் பெற்றோர் வெள்ளிக்கிழமை சன்சாத் மார்க் காவல் நிலையத்திற்கு எஃப்.ஐ.ஆர் நகலைப் பெறவும் அவரைச் சந்திக்கவும் சென்றுள்ளனர். ஆனால், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அலுவலகத்தை அடைந்தபோது, ​​நீலம் ஆசாத் அங்கு இல்லை என்று கூறப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்திக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

போலீசாரிடம் எஃப்.ஐ.ஆர் கேட்டபோது, ​​நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

மனோரஞ்சன் டி மற்றும் சாகர் சர்மா பார்வையாளர்கள் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து புகை கேன்களை திறந்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில், நீலம் ஆசாத் மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை திறந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

நான்கு குற்றவாளிகளுடன், லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மகேஷ், முக்கிய குற்றவாளியான லலித் ஜா மற்றும் மற்றவர்களுடன் பகத் சிங் ஃபேன் பேஜ்என்ற ஃபேஸ்புக் குழு மூலம் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

லலித் ஜா வெள்ளிக்கிழமை ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Delhi Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment