நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியதால், அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் விவாதிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.
“அவையின் விதிகள் அதன் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஃபரூக் அப்துல்லா, ப.சிதம்பரம் அவையில் கலந்துகொள்ள அனுமதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அரசாங்கத்தின் கூட்டத்தில், பொருளாதார மந்தநிலை, வேலை இழப்பு மற்றும் விவசாய பிரச்னைகள் போன்ற விடயங்கள் குறித்து அமர்வின் போது விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியது என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
தேசிய மாநாட்டின் எம்.பி. ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்டது. “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை எவ்வாறு சட்டவிரோதமாக தடுத்து வைக்க முடியும்? அவரை நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
காஷ்மீரில் கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் அப்துல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்காக இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு மாற்றிய பின்னர் இந்த முடிவு காஷ்மீரில் கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் அப்துல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ளார், இது ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மையம் மாற்றிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே, முன்னாள் நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை நாடளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் முன் உதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ப.சிதம்பரத்தையும் குளிர்கால கூட்டத்தொடர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று ஆசாத் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
மோடியைத் தவிர, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பல மூத்த எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் தவார்சந்த் கெஹ்லோட், சவுத்ரி, ஆசாத் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், தெலுங்கு தேசம் கட்சி ஜெயதேவ் கல்லா, வி.விஜய்சை ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவையின் சீரான செயல்பாடு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் நடைபெற்றது.
மத்திய அரசு குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்யும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதால் குடியுரிமை மசோதா, அயோத்தி சட்டம் மற்றும் வேறு சில முக்கிய விவகாரங்கள் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும். காஷ்மீர் பிரச்னை, டெல்லி மாசுபாடு, பொருளாதார மந்தநிலை, வேலையின்மை ஆகிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் பட்டியலில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்னை பெருநிறுவன வரி விகிதத்தை குறைப்பதற்கான அதன் உத்தரவை சட்டமாக மாற்றுவதாகும். இது பொருளாதார மந்தநிலையைத் தடுக்கும் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியாக கூறப்படுகிறது. செப்டம்பரில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு வருமான வரிச் சட்டம் 1961, நிதிச் சட்டம் 2019 ஆகியவற்றில் திருத்தங்களைக் கோருகிறது.
இ-சிகரெட்டுகள் போன்ற பொருட்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் சேமிப்பைத் தடைசெய்து செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மற்றொரு சட்ட மசோதாவையும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர் அமர்வின் போது, இரு அவைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டம் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினத்தைக் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அன்றைய தினங்களில் அவைகளில் உரையாற்ற உள்ளனர். இந்த குளிர் காலக் கூட்டத்தொடர் அமர்வு டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவடைகிறது.