Advertisment

காங்கிரஸில் இருந்து பி.சி.சாக்கோ விலகல்: கட்சித் தலைமை மீது புகார்

“காங்கிரசின் பலவீனங்கள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கின்றன. காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது, அது வேறு எந்தக் கட்சியினாலும் அல்ல.. அது அதன் செயலால்தான் பலவீனமடைந்து வருகிறது” என்று பி.சி.சாக்கோ கூறினார்.

author-image
WebDesk
New Update
PC Chacko resigned from congress, kerala, congress party, kerala politics, PC Chacko quits cogress, பிசி சாக்கோ ராஜினாமா, மூத்த காங்கிரஸ் தலைவர் பிசி சாக்கோ ராஜினாமா, காங்கிரஸில் இருந்து விலகிய பிசி சாக்கோ, kerala assembly election, pc chacko alleged on congress high command

கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான பி.சி.சாக்கோ, காங்கிரஸ் கட்சியில் இடங்களை ஒதுக்குவதை எதிர்த்து புதன்கிழமை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் குழுக்களின் அடிப்படையில் இடங்கள் அளிக்கப்படுவதாகவும் கட்சியை திறம்பட வழிநடத்தத் தவறியதாக காங்கிரஸ் மத்திய தலைமை மீது பி.சி. சாக்கோ குற்றம் சாட்டினார்.

Advertisment

74 வயதான சாக்கோ தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

“நான் இதைப் பற்றி பல நாட்களாக என் மனதில் சிந்தித்து வருகிறேன். கேரளாவில் காங்கிரஸ் இல்லை. இங்கே ஒரு காங்கிரஸ்தான் (நான்) மற்றும் ஒரு காங்கிரஸ் (ஏ) இருக்கிறது. இது இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தடையாக குழுவாதம் உள்ளது.” என்று அவர் கூறினார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் இரு மேலாதிக்கக் குழுக்களைப் பற்றி குறிப்பிடும் சாக்கோ, ஒன்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலும் மற்றொன்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையிலும் நடத்தபடுவதாக கூறினார்.

இருப்பினும், மூத்த தலைவர் பி.சி.சாக்கோ அவருடைய அடுத்த அரசியல் நகர்வு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

கேரளாவில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், குழுவாதம் ஒரு தடையாக இருக்கிறது என்று சாக்கோ கூறினார். அவர் இதை பலமுறை காங்கிரஸ் உயர் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றார் என்றும் ஆனால், கட்சியில் இரு குழுக்களும் வழங்கிய திட்டங்களுக்கு மத்திய தலைமை ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார். கட்சியில் குழுவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய தலைமை எதுவும் செய்யவில்லை என்று கூறிய பி.சி.சாக்கோ இரு குழுக்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்றார்.

இதில் சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு குழுவின் தலைவர்கள் எழுதிய கடிதத்தையும் சாக்கோ குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டதாக கூறினார். ஆனால். அவர் கையெழுத்து பிரச்சாரத்திற்கு எதிரானவர் என்று தெரிவித்தார். இருப்பினும், 23 தலைவர்கள் குழு தங்கள் கடிதத்தில் எழுப்பிய விடயங்களுடன் தான் உடன்படுவதாகவும் அவர் கூறினார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காங்கிரஸால் ஒரு தலைவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

“நான் கையொப்ப பிரச்சாரத்துடன் உடன்பட முடியாது. ஆனால், அவர்கள் சொன்னது சரிதான். காங்கிரசின் பலவீனங்கள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கின்றன. காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது. அது வேறு எந்தக் கட்சியினாலும் அல்ல.. அது அதன் செயலால் தான் பலவீனமடைந்துவருகிறது” என்று பி.சி.சாக்கோ கூறினார்.

நான்கு முறை மக்களவை எம்.பி.யாக இருந்த பி.சி.சாக்கோ குறைந்தது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். காங்கிரசின் மாணவர் பிரிவான கேரள மாணவர் சங்கத்தின் (கே.எஸ்.யு) ஆர்வலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1968ம் ஆண்டில் கே.எஸ்.யுவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1970ல் கேரளாவில் இளைஞர் காங்கிரஸின் தலைவரானார். 1980ல் கேரள சட்டமன்றத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில்துறை அமைச்சரானார்.

பி.சி.சாக்கோ முதன் முதலில் 1991-ல் எம்.பி ஆனார். தொலைதொடர்பு உரிமங்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

Kerala Assembly Elections 2021 Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment