Advertisment

தியாகிகளை கௌரவிக்க ‘மேரி மதி மேரா தேஷ்’ பிரச்சாரத்தை அறிவித்த மோடி

ஆண் துணையின்றி பெண்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுமதித்ததற்காக சவுதி அரசுக்கும், இந்தியாவிற்கு பழங்கால கலைப்பொருட்களை திரும்ப அளித்த அமெரிக்க அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mann ki baat, pm modi, modi addresses mann ki baat, pm narendra modi, pm modi mann ki baat, தியாகிகளை கௌரவிக்க ‘மேரி மதி மேரா தேஷ்’ பிரச்சாரத்தை அறிவித்த மோடி, PM Modi pm modi campaign, pm modi announces campaign, mann ki baat announcement,india news

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி உரையின் 103வது நிகழ்ச்சியில், ஆண் துணையின்றி பெண்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுமதித்ததற்காக சவுதி அரசுக்கும், இந்தியாவிற்கு பழங்கால கலைப்பொருட்களை திரும்ப அளித்த அமெரிக்க அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையில், நாட்டின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் 'மேரி மதி மேரா தேஷ்' என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்தார். மேலும், பழங்கால தொல்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய அமெரிக்க அரசுக்கும், ஆண் துணையின்றி பெண்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுமதித்த சவுதி அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் 103வது பகுயில், பிரதமர் மோடி, 'மேரி மாத்தி மேரா தேஷ்' பிரச்சாரத்தின் கீழ், "நமது அழியா தியாகிகளின்" நினைவாக நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறினார்.

“இந்தத் தலைவர்களின் நினைவாக, நாட்டின் லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும்,” என்று அவர் கூறினார். மேலும், நாடு முழுவதும் ‘அமிர்த கலசம் யாத்திரை’ ஏற்பாடு செய்யப்படும். அமிர்த கலசம் யாத்திரையின் ஒரு பகுதியாக, 7,500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

தேசிய போர் நினைவிடம் அருகே மண் மற்றும் மரக்கன்றுகளை இணைத்து 'அமிர்த வாதிகா' கட்டப்படும் என்று அவர் கூறினார். “கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து வரும் அமிர்த காலாத்தின் அடுத்த 25 வருடங்களில் ‘பஞ்ச் பிராணா’ பற்றிப் பேசினேன். 'மேரி மாத்தி மேரா தேஷ்' பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம், இந்த 'ஐந்து தீர்மானங்களை' நிறைவேற்ற உறுதிமொழி எடுப்போம்” என்றார்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, 'ஹர் கர் திரங்கா அபியான்' நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் ஒன்றிணைந்ததை எடுத்துரைத்து, உறுதிமொழி ஏற்கும் போதும், நாட்டின் புனிதமான மண்ணைப் பிடிக்கும் போதும், தங்கள் செல்ஃபிக்களை yuva.gov.in இல் பதிவேற்றம் செய்யுமாறு பார்வையாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதேபோல், இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி, இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) வீரர்களையும் பிரதமர் மோடி பாராட்டினார். யமுனை உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல பகுதிகளில் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டின் மேற்குப் பகுதியில், பிபர்ஜாய் புயல் சில காலத்திற்கு முன்பு குஜராத்தின் பகுதிகளையும் தாக்கியது. ஆனால், இத்தனை பேரிடர்களுக்கு மத்தியிலும், கூட்டு முயற்சியின் ஆற்றலை மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளோம்” என்றார். “உள்ளூர் மக்கள், நம்முடைய தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) வீரர்கள், உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற பேரிடர்களை எதிர்த்துப் போராட இரவும் பகலும் உழைத்துள்ளனர்.” என்று கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் பழமையான கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பியளித்ததற்காக அமெரிக்க அரசுக்கு மோடி நன்றி தெரிவித்தார். “இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்த கலைப்பொருட்கள் 2,500 முதல் 250 ஆண்டுகள் பழமையானவை. இந்த அரிய பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடையவை என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்” என்று அவர் கூறினார். இவை டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டவை ஆகும்.

“இவற்றில் சில உங்களை ஆச்சரியத்தில் நிரப்பும். அவற்றைப் பார்த்தால் மெய்சிலிர்க்க நேரிடும். இவற்றில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகான மணற்கல் சிற்பத்தையும் நீங்கள் பார்க்கலாம். இது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு 'அப்சரா' நடனத்தின் கலைப்படைப்பு," என்று அவர் கூறினார். இந்தப் பட்டியலில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல சிலைகள் இருப்பதாகவும், தமிழகத்தின் வளமான கலாச்சாரத்துடன் தொடர்புடைய 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தேவி மற்றும் முருகன் சிலைகள் இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகப் பெருமானின் வெண்கலச் சிலையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லலிதாசனில் உள்ள உமா-மகேஸ்வரரின் சிலை 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது, அதில் இருவரும் நந்தியின் மீது அமர்ந்துள்ளனர். ஜைன தீர்த்தங்கரர்களின் இரண்டு கல் சிலைகளும் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளன. சூரிய தேவ் கடவுளின் இரண்டு சிலைகளும் உங்களை கவர்ந்திழுக்கும்” என்று அவர் கூறினார். “இதில் ஒன்று மணற்கற்களால் ஆனது. திருப்பி அனுப்பப்பட்ட பொருட்களில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பேனல் உள்ளது. இது கடல் கலக்கத்தின் கதையை முன்னுக்கு கொண்டு வருகிறது. 16-17 ஆம் நூற்றாண்டின் இந்த குழு தென்னிந்தியாவுடன் தொடர்புடையது” என்று பிரதமர் மோடி கூறினார்.

'போஜ்பத்ரா'வின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக உத்தரகாண்ட் பெண்களையும் மோடி பாராட்டினார். “கடந்த ஆண்டு அக்டோபரில் போஜ்பத்ராவில் எனக்கு ஒரு தனித்துவமான கலைப்படைப்பை வழங்கிய பெண்கள் இவர்கள். இந்தப் பரிசைப் பெற்றதில் நானும் வியப்படைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டைய காலங்களிலிருந்து, நமது வேதங்களும் புத்தகங்களும் இந்த போஜ்பத்ராக்களில் பாதுகாக்கப்படுகின்றன. மகாபாரதமும் போஜ்பத்ராவில் எழுதப்பட்டது” என்றார்.

ஆண் துணையோ அல்லது மெஹ்ராம் இல்லாமலோ ஹஜ் பயணம் செய்த 4,000-க்கும் மேற்பட்ட பெண்களைப் பற்றி பேசுகையில், இது மிகப்பெரிய மாற்றமாகும் என்றார். “முன்பு, முஸ்லீம் பெண்கள் மெஹ்ரம் இல்லாமல் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மன் கி பாத் மூலம், சவுதி அரேபியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மெஹ்ரம் இல்லாமல் ஹஜ் பயணம் செல்லும் பெண்களுக்காக பிரத்யேகமாக பெண் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஹஜ் பயணக் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “இப்போது அதிகமானோர் ஹஜ் பயணத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஹஜ் யாத்திரை முடித்து திரும்பிய மக்கள், குறிப்பாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் கடிதங்கள் மூலம் வழங்கிய ஆசீர்வாதம் மிகவும் ஊக்கமளிக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு போதைப்பொருளுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். “சுமார் 1.5 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அது அழிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கிலோ போதைப்பொருளை அழித்து இந்தியா தனிச் சாதனை படைத்துள்ளது. இந்த மருந்துகளின் விலை 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

வாரணாசி, அயோத்தி, மதுரா மற்றும் உஜ்ஜைனி போன்ற இந்திய புனிதத் தலங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். “அமர்நாத் யாத்திரையை நடத்துவதற்காக கலிபோர்னியாவிலிருந்து இங்கு வந்த இரண்டு அமெரிக்க நண்பர்கள் பற்றி நான் அறிந்தேன். அமர்நாத் யாத்திரை தொடர்பான சுவாமி விவேகானந்தரின் அனுபவங்களைப் பற்றி இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களே அமர்நாத் யாத்திரைக்கு வந்ததால் அவர்கள் மிகவும் உத்வேகம் அடைந்தனர்… இதுவே இந்தியாவின் சிறப்பு, இந்தியா அனைவரையும் ஏற்றுக்கொள்கிறாள், அனைவருக்கும் ஏதாவது கொடுக்கிறாள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment