scorecardresearch

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் -பிரதமர் மோடி வலியுறுத்தல்

உலகில் நடக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது. இதே வேகத்தை நீதித்துறையிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

pm modi

நீதியை அணுகுவது மேம்படும் என்பதால் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:

உண்மையான சட்டத்துடன், எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

எனவே மக்கள் சட்ட விளக்கத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இந்த விவகாரத்தை அரசு ஆய்வு செய்து வருகிறது.

இந்தியத் தலைமை நீதிபதி உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவ்வாறு நடந்தால் அது நீதிக்கான அணுகலை மேம்படுத்தும்.

மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை ஏன் நம் தாய்மொழியில் கற்பிக்க முடியாது? சில மாநிலங்கள் ஏற்கனவே செய்து வருகின்றன.

டிஜிட்டல் இந்தியாவுடன் நீதித்துறையை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப, கிராமங்களில் கூட, குடிமக்கள் நீதித்துறையின் மீதும் இதேபோன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள்.

அவநம்பிக்கை இருந்தபோதிலும், இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றியமைத்துள்ளது மற்றும் கிராமங்களில் ஆன்லைன் முறையில் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

உலகில் நடக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது. இதே வேகத்தை நீதித்துறையிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

சரியான நேரத்தில் ஜாமீன் வழங்குமாறு முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தற்போது 3.5 லட்சத்துக்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் சிறையில் உள்ளனர் என்பதையும் எடுத்துரைத்தார். “இந்த விசாரணைக் கைதிகள் பெரும்பாலும் ஏழை மக்கள். முடிந்தால், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும், ”என்று அவர் வலியுறுத்தினார்.

மேவானிக்கு மீண்டும் ஜாமீன்… சட்டத்தை தவறாக பயன்படுத்திய போலீஸ் – நீதிபதி எச்சரிக்கை

முன்னதாக, ‘நீதி வழங்கும் முறையை உள்ளூர்மயமாக்குவதற்கு’ ஊக்கமளிக்கும் வகையில், உயர் நீதிமன்றங்களில் மொழியியல் தடைகள் அகற்றப்பட்டு, உள்ளூர் மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modi bats for use of local languages in courts