Advertisment

அன்று கொள்ளை அடித்தவர்கள் இன்று கூட்டணி வைக்கிறார்கள் - நரேந்திர மோடி

தாத்ராவில் நடைபெற்ற மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நிகழ்வில் மோடி பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Latest News Live, Modi guruvayur visit

PM Modi Comments on Grand Alliance : தாத்ரா நாகர்ஹாவேலியில் நடைபெற்ற மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

Advertisment

தாத்ரா நாகர்ஹாவேலியின் தலைநகரான சில்வஸ்ஸாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி “ஊழலுக்கு எதிரான என்னுடைய கொள்கைகள் சிலரை கோபமடைய வைத்தது. ஏன் என்றால் நான் அவர்கள் மக்களின் பணத்தை திருடுவதை தடுத்து நிறுத்தினேன். இவர்கள் தான் தற்போது மெகா கூட்டணியை அமைத்து உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

PM Modi Comments on Grand Alliance

மேலும், இந்த கூட்டணி வெற்றி அடையாது. இந்த கூட்டணி எனக்கு எதிரானது அல்ல. நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பேசிய அவர் 4.5 ஆட்சி காலத்தில், ஏழை மக்களுக்கு நிறைய வீடுகள் கட்டித் தந்துள்ளது குறித்தும், டையூ, டாமன், நாகர் ஹாவேலி போன்ற பகுதிகளில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

தாத்ரா, நாகர் ஹாவேலி, டையூ, டாமன் பகுதிகளில் திறந்தவெளி கழிவறைகளை அழித்தது, அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கேஸ் இணைப்பு போன்ற சாதனைகளை நினைவு கூர்ந்து பேசியுள்ளார் நரேந்திர மோடி.

மேலும் படிக்க : கொல்கத்தாவில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணி

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment