Advertisment

‘ரஷ்யாவுடன் இந்தியா துணை நிற்கும்’: மாஸ்கோ மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

60 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Moscw atta.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கச்சேரி அரங்கிற்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது  X பக்கத்தில், "மாஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. 

இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இந்தியா துணையாக நிற்கும்” என்று கூறயுள்ளார். 

இந்த பயங்கரவாத  தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர் தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த குழுவின் கிளை மாஸ்கோவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாங்கள் அறிந்தேன். இந்த தகவலை  நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் கச்சேரி அரங்கின் கூரை இடிந்து விழுந்து தீப்பிடித்தது. இந்த தாக்குதல் ரஷ்யாவில் நடந்த மிகவும் கொடூரமான, மோசமான தாக்குதல் என்று கூறியுள்ளனர். உக்ரைன் உடனான போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அண்மையில்  ரஷ்யா அதிபராக புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/pm-modi-condemns-moscow-concert-hall-attack-9229633/

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் இந்த தாக்குதலை "பெரிய சோகம்" என்று அழைத்தார். ரஷ்யாவின் பிக்னிக் என்ற ராக் இசைக்குழு நேற்று மாஸ்கோவில் உள்ள அரங்கில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாள தெரியாத குழு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மாநில குற்றப் புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு சனிக்கிழமை அதிகாலையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது. காயமடைந்த 145 பேரின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டனர். 

இதில் 115 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 குழந்தைகளும் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

India Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment