அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை 'அது முழுக்கவே ஊழல்வாதிகள் மாநாடு' என்று எதிர்க்கட்சிகள் மீது கடுமையாக தாக்கி பேசினார்.
"இந்த 'வாரிசு' கட்சிகள் 'குடும்பத்தால் மற்றும் குடும்பத்திற்காக' என்ற தாராக மந்திரத்தை பின்பற்றுகின்றன. நாட்டின் ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சியில் அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) அக்கறை இல்லை. அவர்களது குடும்பத்திற்கு ஊழலை அதிகரிப்பதே அவர்களின் பொதுவான குறைந்தபட்ச திட்டமாகும்.
'ஜனநாயகம்' என்றால் 'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி தான். ஆனால் இந்த வாரிசுக் கட்சிகள் ‘குடும்பத்தால், குடும்பங்களுக்காக, குடும்பத்திற்காக’ என்ற முழக்கத்தைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு, அவர்களின் குடும்பம் தான் முதன்மையானது, தேசம் என்றால் எதுவுமில்லை.
இன்று, நாட்டு மக்கள் 2024ல் மீண்டும் எங்களது அரசை கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். அப்போதும் கூட, இந்தியாவின் மோசமான அவலத்திற்கு காரணமானவர்கள் தங்கள் சொந்த கடைகளை அமைத்துள்ளனர்.
அவர்கள் (எதிர்க்கட்சிகள்) வேறு ஏதாவது பாடலைப் பாடுகிறார்கள்.ஆனால் யதார்த்தம் வேறு ஒன்று. தயாரிப்பு ஒன்று தான். ஆனால், வேறு ஏதாவது ஒரு லேபிள் போடப்பட்டுள்ளது. இதுதான் அவர்களின் கடையின் உண்மை. அவர்களின் கடையில் இரண்டு பொருட்களுக்கு உத்தரவாதம் உள்ளது. ஒன்று, சாதிவெறி என்ற விஷத்தை விற்கிறார்கள். இரண்டு, அவர்கள் வரம்பற்ற ஊழல் செய்கிறார்கள். அவர்களின் தயாரிப்பு தான் 20 லட்சம் கோடி ரூபாய் ஊழல்.
இந்த நாட்களில், அவர்கள் பெங்களூரில் கூடுகிறார்கள். ஒரு காலத்தில், மிகவும் பிரபலமான ஒரு பாடல் உள்ளது: (ஒரே முகத்தில், மக்கள் பல முகங்களை வைக்கிறார்கள்). இவர்கள் ஒரே பிரேமில் கேமரா முன் தோன்றும் போது, அந்தக் காட்சியைப் பார்க்கும் நாட்டின் குடிமக்களின் மனதில் முதலில் தோன்றும் எண்ணம், 'பல லட்சம் கோடி ஊழல்' என்பதுதான்.
அது (பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம்) முழுக்கவே ஊழல்வாதிகள் மாநாடு என நாட்டு மக்கள் சொல்கிறார்கள். இங்கே, கோடிக்கணக்கான ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஒருவர், அவர்கள் மிகவும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள். முழு குடும்பமும் ஜாமீனில் இருந்தால், அவர்கள் இன்னும் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
ஊழலை ஊக்குவிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தும் தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன. மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தல் வன்முறைகள் தொடர்பாக இடதுசாரிகளும், காங்கிரஸும் மவுனம் காக்கிறார்கள். ” என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil