இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான மற்றும் அமைதியான உறவுகள் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் முக்கியமானது என்பதைக் கவனித்த பிரதமர் நரேந்திர மோடி, "எங்கள் இருதரப்பு தொடர்புகளில் உள்ள அசாதாரணத்தை போக்க எல்லையில் இரு நாடுகளும்" நீடித்த சூழ்நிலையை அவசரமாக" தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
நியூஸ் வீக் இதழுக்கு அளித்த பேட்டியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடங்கிய ராணுவ நிலைப்பாட்டைத் தொடர்ந்து சீனாவுடனான உறவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட மோடி, “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் குறிப்பிடத்தக்கது” என்றார்.
’நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை நாம் அவசரமாகத் தீர்க்க வேண்டும், இதனால் நமது இருதரப்பு தொடர்புகளில் உள்ள அசாதாரணத்தை நமக்குப் பின்னால் வைக்க முடியும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான மற்றும் அமைதியான உறவுகள் நமது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் முக்கியம்.
ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம், நமது எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நம்புகிறேன்,’ என்று அவர் கூறினார்.
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிரான குவாட் குழுமம் குறித்து மோடி பேசுகையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, சீனா: இந்த நாடுகள் அனைத்தும் பல குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளன. நாங்கள் வெவ்வேறு குழுக்களில் வெவ்வேறு சேர்க்கைகளில் இருக்கிறோம். குவாட் எந்த நாட்டுக்கு எதிராகவும் குறிவைக்கப்படவில்லை. SCO, BRICS மற்றும் பிற பல சர்வதேச குழுக்களைப் போலவே, குவாட் என்பதும் ஒரு பகிரப்பட்ட நேர்மறையான கொள்கையில் செயல்படும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் குழுவாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியமானது உலகளாவிய வர்த்தகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரமாகும், மேலும் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமானது.
காலநிலை நடவடிக்கை, பேரிடர் மேலாண்மை, மூலோபாய தொழில்நுட்பங்கள், நம்பகமான விநியோகச் சங்கிலி, சுகாதாரப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், குவாட் நாடுகள் சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பற்றிய தங்கள் பார்வையை நிரூபிக்கின்றன.
சீனாவுடன் போட்டியிடும் போது, "இந்தியா, ஒரு ஜனநாயக அரசியல் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி இயந்திரமாக, தங்கள் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்த விரும்புவோருக்கு இயற்கையான தேர்வாகும்.
எங்கள் பலத்தை கருத்தில் கொண்டு, போட்டிச் செலவில் உலகத் தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு இந்தியா இப்போது மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. உலகத்திற்கான உற்பத்தியைத் தவிர, பரந்த இந்திய உள்நாட்டு சந்தை கூடுதல் ஈர்ப்பாக உள்ளது. நம்பகமான விநியோகச் சங்கிலிகளை அமைக்க விரும்புவோருக்கு இந்தியா சரியான இடமாகும், என்றார்.
மத சிறுபான்மையினரின் பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து மோடி கூறுகையில், இது சிலர் வேண்டுமென்றே பரப்பும் கதை. இந்தியாவின் சிறுபான்மையினர் கூட இந்த கதையை இனி நம்புவதில்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் அல்லது பார்சிகள் போன்ற சிறுபான்மையினர் என அனைத்து மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரும் இந்தியாவில் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
“நம் நாட்டில் முதன்முறையாக, திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் என்று வரும்போது, எங்கள் அரசாங்கம் தனித்துவமான saturation coverage அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு புவியியல் சார்ந்த மக்கள் குழுவிற்கு அவை கட்டுப்படுத்தப்படவில்லை. அவை எல்லாரையும் சென்றடையும் வகையில் உள்ளன, அதாவது பாகுபாடு காட்ட முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வீடு, கழிப்பறை, தண்ணீர் இணைப்பு அல்லது சமையல் எரிபொருளாக இருந்தாலும், இலவசக் கடன் அல்லது சுகாதாரக் காப்பீடு என எதுவாக இருந்தாலும், அது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் சமூகம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் சென்றடைகிறது, என்றார்.
தலைமைத்துவம் குறித்து பேசிய மோடி, கேட்பது தலைமைத்துவத்திற்கு முக்கியமான குணம். இந்த குணம் எனக்கு பிறவியிலேயே கடவுள் கொடுத்துள்ளான், நானும் அதை வளர்த்துள்ளேன். என்னிடம் உள்ள மற்றொரு குணம் என்னவென்றால், நான் எப்போதும் இந்த தருணத்தில் இருக்கிறேன். தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது வேறு எதனாலும் நான் திசைதிருப்பப்படவில்லை. நான் ஒரு செயலைச் செய்யும்போது, 100 சதவிகிதம் ஈடுபட்டு அந்த பணியில் மூழ்கி இருக்கிறேன்.
"தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எல்லா பக்கமும் கருத்துக்களைக் கொண்டிருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு தலைவருக்கு அடிமட்ட மக்களுடன் இணைவதற்கும் வடிகட்டப்படாத கருத்துக்களைப் பெறுவதற்கும் திறன் இருக்க வேண்டும். மனித சார்பு மற்றும் விருப்பத்தேர்வுகள் நடுநிலையாவதற்கு, இதுபோன்ற பல பின்னூட்ட சேனல்கள் இருக்க வேண்டும். இந்தியாவின் 80 சதவீத மாவட்டங்களில் குறைந்தது ஒரு இரவைக் கழித்திருக்கிறேன்.
எனவே எனக்கு எல்லா இடங்களிலும் நேரடி இணைப்புகள் உள்ளன, இது எனக்கு நேரடியான கருத்துக்களைப் பெற உதவுகிறது. அதே நேரத்தில், வழிகாட்டுதல் அல்லது அறிவுறுத்தல்கள் மேலிருந்து கீழாகத் திறம்படச் சென்றடைவது முக்கியம்,” என்றார்.
Read in English: PM Modi: To put behind abnormality in ties, India and China must address border issue
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“