Advertisment

சனாதன தர்மத்தை அழிக்க எதிர்க்கட்சிகள் ‘காமந்திய’ கூட்டணி; தேர்தலை சந்திக்கும் ம.பி.-யில் மோடி பேச்சு

‘சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர்’ ஆகியோருக்கு உத்வேகம் அளித்த ‘சனாதன தர்மத்தை’ அழிக்க எதிர்க்கட்சிகள் 'காமந்திய' கூட்டணியை விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

author-image
WebDesk
New Update
OPP

மத்தியப் பிரதேசத்தில் 50,700 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Advertisment

எதிர்க்கட்சிகள் தலைமையிலான இந்திய கூட்டணியை குறிவைத்து, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை,  ‘சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர்’ ஆகியோருக்கு உத்வேகம் அளித்த ‘சனாதன தர்மத்தை’ அழிக்க எதிர்க்கட்சிகள் 'காமந்திய' (திமிர்பிடித்த) கூட்டணியை விரும்புகிறது என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தின் பினாவில் 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறை திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

“இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதனத்தை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், நாளை அவர்கள் நம் மீதான தாக்குதல்களை அதிகரிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். 

பிரதமர் மோடி தனது உரையில், பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தால் மாநிலத்தில் பல கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களின் தொடரில் போடப்படும் தொகையைப் போல பல மாநிலங்களில் வருடாந்திர பட்ஜெட் இல்லை.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் ஊழல் மற்றும் குற்றங்களைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.

பிரதமர் மோடி தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கருக்கு இன்று மாலை செல்ல உள்ளார். மத்தியப் பிரதேசத்தில், பினாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்) சுத்திகரிப்பு ஆலையில் 49,000 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மத்தியப் பிரதேசத்தின் பினா மாவட்டத்தில் பிரதமர் தனது அதிரடி நாளைத் தொடங்கினார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் பா.ஜ.க கடும் போட்டி நிலவி வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமரின் வருகை வந்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், இந்த திட்டம் அந்த பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும், ஒரு லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் கட்டுமான கட்டத்தில் மட்டும் 15,000 வேலைகளை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

6,350 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், 9 மாவட்டங்களில் சுகாதார வசதிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், 1 லட்சம் ‘சிக்கில் செல் ஆலோசனை அட்டைகளை’ வழங்குவதைத் தொடங்கி வைப்பதற்கும் பிரதமர் மோடி வியாழக்கிழமை பிற்பகல் சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் மாவட்டத்திற்குச் செல்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment