Advertisment

பிரதமர் மோடி – சரத் பவார் சந்திப்பு; தேசியநலன்கள் குறித்து விவாதித்தாக ட்வீட்

Sharad Pawar meets PM Modi in Delhi, says discussed ‘issues of national interest’: பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை; தேசநலன்கள் குறித்து விவாதித்ததாக சரத் பவார் ட்வீட்

author-image
WebDesk
New Update
பிரதமர் மோடி – சரத் பவார் சந்திப்பு; தேசியநலன்கள் குறித்து விவாதித்தாக ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் சனிக்கிழமை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

Advertisment

"மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ ஷரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்" என்று இரு தலைவர்களின் புகைப்படத்துடன் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்தது. பாராளுமன்றத்தின் பருவகால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சந்திப்பைத் தொடர்ந்து, சரத் பவார் ஒரு ட்வீட்டில், “நம் நாட்டின் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தேன். தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். ” என்று பதிவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவியின் தேர்தலுக்கான எதிர்க்கட்சியின் வேட்பாளராக சரத் பவார் இருப்பார் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருப்பினும், சரத் பவார் அத்தகைய அறிக்கைகளை நிராகரித்தார். பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான ஒரு கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும் ஒருவரின் முடிவு முன்னறிவிக்கப்பட்ட முடிவாக இருக்கும் என்று சரத் பவாரின் கட்சி கூறியுள்ளது.

சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நடந்திய சந்திப்புகளுக்குப் பிறகு இந்த ஊகம் வந்துள்ளது.

முன்னதாக, சரத் பவார் பிரதமருக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார், அதில் மாநில நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் மீது மத்திய அரசு கொண்டுவந்துள்ள  சட்டத்திருத்தம் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

"அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு கூட்டுறவுத் துறையின் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கு திருத்தப்பட்ட சட்டம் சிறிதும் உதவாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

"குறைதீர்ப்பு வாரியம் மற்றும் மேலாண்மை நிச்சயமாக கண்டிப்பாக செயல்பட வேண்டும் மற்றும் வைப்பாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் அதே நேரத்தில், அவ்வாறு செய்யும்போது, ​​அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள கூட்டுறவுக் கொள்கைகள் அதிக ஆர்வமுள்ள ஒழுங்குமுறையின் பலிபீடத்தில் தியாகம் செய்யப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்., ”என்று பவார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Sharad Pawar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment