ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க : ‘Beacon of hope,’ ‘promise of a brighter future’: PM Modi on SC upholding abrogation of Article 370
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டபிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழங்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த அத்தனை வழக்குகளுக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், சட்டப்பிரிபு 370-ஐ நீக்கியது செல்லும் என்றும், வரும் 2024- செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்துக்கான வாக்குறுதியாகவும் உள்ளது. வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்ப எங்களின் கூட்டு உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாகும் எனறு தனது எக்ஸ் பக்கததில் கூறியுள்ளார்.
மேலும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக இருக்கும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று, 370வது பிரிவை ரத்து செய்யும் முடிவு “முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது” என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஒரு காலத்தில் வன்முறையால் அச்சுறுத்தப்பட்ட இந்த இடத்தில் வளர்ச்சியும் மனித வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொண்டு வந்துள்ளன. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள செழிப்பு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளிலும் வசிப்பவர்களின் வருமான அளவை உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அமித்ஷா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ரத்து செய்யப்பட்ட பிறகு, ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் பிரிவினைவாதமும் தாழ்த்தப்படுதலும் இப்போது கடந்த கால விஷயங்களாக மாறிவிட்டது. முழுப் பகுதியும் இப்போது மெல்லிசை மற்றும் கலாச்சார சுற்றுலா மூலம் எதிரொலிக்கிறது. ஒற்றுமையின் பிணைப்புகள் வலுப்பெற்று, பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுப்பெற்றுள்ளது. மீண்டும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் எப்பொழுதும் நமது தேசத்திற்கு சொந்தமானவை, இனியும் அப்படியே இருக்கும் என்று கூறியுள்ளார்.
“பிரதமர் நரேந்திரமோடி ஜியின் தலைமையின் கீழ், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும், பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. புதிய ஊக்குவிப்புகளுடன் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது, அதிநவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஏழைகளுக்கு நலன்புரி சலுகைகள் மூலம் அதிகாரம் அளிப்பது என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்திற்காக எங்கள் முழு பலத்தையும் தொடர்ந்து செலுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“