Advertisment

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய மோடி

மகா கும்பமேளாவை முன்னிட்டு இன்றைய தினம் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். இதைத் தொடர்ந்து, கங்கையில் அவர் பூஜை செய்தார்.

author-image
WebDesk
New Update
Modi at kumbh 1

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், அவர் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

Advertisment

 

Modi at maha kumbh 2

 

Advertisment
Advertisement

இந்த ஆண்டுக்கான மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நாள்தோறும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் இதில் புனித நீராடினர்.

 

Maha kumbh

 

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்றைய தினம் கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்றார். முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். 

 

Modi 1

 

புனித நீராடிய பின்னர், பல்வேறு பூஜைகள் செய்து மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு பால், சால்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

ஏற்கனவே, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியன்று கும்பமேளா ஏற்பாடுகளை மோடி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Uttar Pradesh Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment