Advertisment

நீதித்துறையை முடக்கிய டி.எம்.சி... ஓட்டுக்காக ஜிகாதிகளுக்கு ஓ.பி.சி உரிமைகள் அளிப்பு: மம்தா மீது மோடி கடும் விமர்சனம்

77 முஸ்லிம் சமூகங்களுக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்களை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மம்தா பானர்ஜி அளித்த பதில் ஆச்சரியமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Narendra Modi

மேற்கு வங்கத்தில், பராசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி பேசினார். (Video grab: BJP4India via PTI)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2010-ம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநில அரசு வழங்கிய அனைத்து ஓ.பி.சி சான்றிதழ்களையும் செல்லாது என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பதிலை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று விமர்சித்தார். மேலும், பாதகமான உத்தரவுகளை வழங்கும் நீதிபதிகளின் பின்னால் குண்டர்கள் அனுப்பப்படுவார்களா என்று ஆச்சரியப்பட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: PM Modi targets Mamata, says TMC throttling judiciary, gave OBCs’ rights to ‘vote jihadis’

“ஓ.பி.சி-யினரின் நம்பிக்கைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி) துரோகம் இழைத்துவிட்டது. இதை கொல்கத்தா உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 77 முஸ்லிம் சமூகத்தினருக்கு ஓ.பி.சி சான்றிதழ் வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. டி.எம்.சி (அரசு) லட்சக்கணக்கான ஓ.பி.சி இளைஞர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது, அவை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை. ஆனால், அவை ஒரே இரவில் ‘ஓட்டு ஜிஹாதிகளுக்கு’ வழங்கப்பட்டுள்ளன. இது பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளை சிறுமைப்படுத்தியுள்ளது” என்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அசோக்நகரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் மோடி பேசினார்.

“நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு, டி.எம்.சி முதல்வர் அதை எதிர்த்தார். அவர் சொன்ன கருத்துகளைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவர் சில நீதிபதிகளை கேள்வி எழுப்பினார், நீதித்துறையைக்கூட கேள்வி எழுப்பினார். இப்போது நீதிபதிகள் பின்னால் குண்டர்கள் அனுப்பப்படுவார்களா? டி.எம்.சி மேற்கு வங்கத்தில் நீதித்துறையை முடக்கி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸால் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. அவர்களின் தவறான செயல்களை அம்பலப்படுத்துபவர்களை குறிவைக்கிறது” என்று மோடி கூறினார்.

டெல்லியில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரிப்பதாக மம்தா பானர்ஜி கூறியதற்காக பிரதமர் மோடி விமர்சித்தார். “சி.பி.ஐ(எம்)-க்கு ஒரு ஓட்டு கொடுத்தால் அது திரிணாமுல் காங்கிரசுக்கு செல்லும். டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர்களின் திரைமறைவு விளையாட்டை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்று மோடி கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில், ஊழலில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்தி, கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் திருப்பித் தருவேன் என்றும் மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment