பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மற்றும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க, பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 10) தென்னிந்தியாவுக்கு வருகை புரிகிறார். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என மூன்று முக்கிய மாநிலங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துக் கொள்கிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இந்த பொதுக்கூட்ட நிகழ்வு, மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான துவக்கமாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களின் விபரம் பின்வருமாறு:
காலை 10 மணி - எடுக்குரு பைபாஸ், NH16 குண்டூர், ஆந்திர பிரதேசம்.
மதியம் 3.30 மணி - திருப்பூர், தமிழ்நாடு.
இரவு 7.15 மணி - கே.எல்.இ கல்லூரி வளாகம், ஹூப்ளி, கர்நாடகா.