/tamil-ie/media/media_files/uploads/2017/06/president-election-pm-narendra-modi-759.jpg)
பிரதமர் நரேந்திர மோடி
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று தில்லியில் இருந்து சீனா புறப்படுகிறார். ஏப்ரல் 27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி வுஹான் நகரில் நடைபெற இருக்கும் முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கலந்து கொள்வதற்காக மோடி இன்று(வியாழக்கிழமை) மாலை சீனாவுக்கு செல்ல உள்ளார். இந்த முறைசாரா சந்திப்பு 1954 க்குப் பிறகு முதல் முறையாக நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பு தொடர்பாகச் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, "நாங்கள் நடத்தும் இந்த முறையான உச்சி மாநாடு முழுமையான வெற்றி பெறும் என்று உறுதியாகக் கூறுகிறோம் மற்றும் சீனா-இந்தியா உறவுகளில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும். " என்று தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, இந்தியாவும் சீனாவுக்கும் இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும். இந்த ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு வருகிற ஜூனில் நடைபெற உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.