மினி வேனா சரக்கு வேனா? தலைசுற்றிய புதுச்சேரி போலீசார்!

இதையடுத்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களுடன் மினிலாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களுடன் மினிலாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
wine 3 - unsplash (1)

புதுச்சேரியில் மினிவேனில்  போலி மதுபான தொழிற்சாலை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 fake liquor factory in Puducherry: புதுச்சேரியில் மினிவேனில்  போலி மதுபான தொழிற்சாலை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

புதுச்சேரி வில்லியனூர்- திருக்காஞ்சி சாலையில் சந்தேகம் படும்படி ஒரு மினி வேன் நிறுத்தப்பட்டிருப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலிசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த மினி வேனை சோதனையிட்ட போது,போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் படும். எரிசாராயம், கள்ளச் சாராயம், காலி மதுபாட்டில் கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், தமிழக போலி மதுபான லேபிள்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களுடன் மினிலாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்  செந்தில்குமார், சீனு மற்றும் அனுமந்தை அருகே செட்டியான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர்  ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Advertisment
Advertisements

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: