Advertisment

சபரிமலை விவகாரம் : பெண் பக்தையின் வருகைக்கு எதிராக போராடிய 150 பேர் மீது வழக்கு

52 வயது பெண்ணின் வருகைக்கு எதிராக சரண கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தார்கள் ஐயப்ப பக்தர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். செப்டம்பர் 28ம் தேதி இந்த உத்தரவினை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

அக்டோபர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜைகளுக்காக ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலிற்கு சென்று வழிபாடு நடத்த நிறைய பெண்கள் முயற்சி செய்தும், அந்த பெண்களை கோவிலிற்குள் நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்திவிட்டனர்.

மேலும் படிக்க : செய்திகள் சேகரிக்க பெண் ஊடகவியலாளர்களை அனுப்பாதீர்கள் - கேரள இந்து அமைப்பினர்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள்

இம்மாதம் 5ம் தேதி மாலை கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று கோவிலில் வழிபாடு நடத்த வந்தார் பெண் பக்தை லலிதா ரவி. 52 வயதான அவர் தன்னுடைய பேரக் குழந்தைக்கு சோறுண்ணு என்ற முதல் சோறு ஊட்டும் நிகழ்விற்காக கோவிலிற்கு வந்திருக்கிறார்.

ஆனால் நுழைய விடாமல் தடுத்தி நிறுத்திவிட்டனர் போராட்டக்காரர்கள். சரண கோஷம் எழுப்பி அந்த பெண் பக்தையை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் 200 பேர் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது சன்னிதான காவல் துறை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment