New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/03/PcpCwbrkuP2CkmMwKcva.jpg)
புதுச்சேரியில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சாலை விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மடுகரைச் செல்லும் பிரதான சாலையான மேட்டுப்பாளையம் நான்குவழிச் சாலையின் புதிய மேம்பாலம் அருகே இளைஞர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி வழியாகச் செல்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று சாலை விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் சில இளைஞர்கள் பாதுகாப்பற்ற வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.#Pondicherry #BikeStunt pic.twitter.com/TlMlmX5RHb
— Indian Express Tamil (@IeTamil) March 3, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.