புதுச்சேரியில் மக்கள் மன்றம்: ஒரே நாளில் 73 புகார்கள்; 26 புகார்களுக்கு உடனடி தீர்வு

பொதுமக்கள் தரப்படும் புகார் உடனடித் தீர்வு வழங்க புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி ஐ ஜி சத்திய சுந்தரம் ஸ்டைலில் ஒரே நாளில் 26 புகார்கள் தீர்வு காணப்பட்டது.

பொதுமக்கள் தரப்படும் புகார் உடனடித் தீர்வு வழங்க புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி ஐ ஜி சத்திய சுந்தரம் ஸ்டைலில் ஒரே நாளில் 26 புகார்கள் தீர்வு காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
police

புதுச்சேரி போலீசார் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் என்ற பெயரில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் குறை கேட்டு வருகின்றனர். 

Advertisment

அதன்படி மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் கொண்டு பொதுமக்களிடம் கலந்து
குறைகேட்டார்.

WhatsApp Image 2025-05-04 at 12.36.11_78da3989

மேட்டுப்பாளையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், மடுகரை புறக்காவல் நிலையத்தில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, அரியாங்குப்பத்தில் தெற்கு
பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம்,போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரவின்திரிபாதி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், மோகன் குமார்,
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா,போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.

Advertisment
Advertisements

இந்த குறைதீர்வு முகாமில் 43பெண்கள் உள்பட 204 பேர் கலந்துகொண்டு 73 புகார்களை அளித்தனர். அவற்றில் பெரும்பாலானவை நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை, வீட்டை காலி செய்வது உள்ளிட்டவையாக இருந்தது.

அந்த புகாரில் 26 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

புதுச்சேரி - பாபு ராஜேந்திரன் 

Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: