Advertisment

டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் ஜெர்மனி சென்ற ரேவண்ணா; அரசியல் அனுமதி வழங்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம்

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கியிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் பிரஜ்வால் ரேவண்ணா, டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு பயணம் செய்ததை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Revanna

பிரஜ்வால் ரேவண்ணா ஜே.டி.(எஸ்) எம்.பி-யும், ஹாசன் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா. (Express Archives)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரஜ்வாலின் டிப்ளமேட் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறும், ராஜதந்திர மற்றும் போலீஸ் வழிகளைப் பயன்படுத்தி அவர் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறும் மத்திய அரசை வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஒரு நாள் கழித்து இந்த விளக்கம் வந்துள்ளது. 

Advertisment

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கியிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் பிரஜ்வால் ரேவண்ணா, டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு பயணம் செய்ததை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. மேலும், அவர் அந்நாட்டுக்கான பயணம் தொடர்பாக எந்த அரசியல் அனுமதியும் கோரப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Prajwal Revanna travelled to Germany on diplomatic passport, no political clearance sought or issued: MEA

செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், எம்.பி-க்கு வேறு எந்த நாட்டிற்கும் விசா குறிப்பு எதையும் அமைச்சகம் வெளியிடவில்லை என்று கூறினார்.

ஜெர்மனிக்கு செல்ல எம்.பி.யின் பயணம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அரசியல் அனுமதி கோரப்படவில்லை அல்லது வழங்கப்படவில்லை. வெளிப்படையாக, விசா குறிப்பும் வெளியிடப்படவில்லை. டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஜெர்மனிக்கு செல்ல விசா தேவையில்லை. இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெளியுறவு அமைச்சகம் வேறு எந்த நாட்டிற்கும் விசா குறிப்பு எதையும் வெளியிடவில்லை... ஆம், அவர் டிப்ளமே பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளார்” என்று கூறினார்.

பிரஜ்வாலின் டிப்ளமேட் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறும், ராஜதந்திர மற்றும் போலீஸ் வழிகளைப் பயன்படுத்தி அவர் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறும் மத்திய அரசை வலியுறுத்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதிய ஒரு நாள் கழித்து இந்த விளக்கம் வந்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவே கவுடாவின் பேரனான பிரஜ்வால் ரேவண்ணா, தனக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) முன் ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கோரி கடிதம் வந்துள்ளது. பெண்களில் ஒருவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான தலைவர் மற்றும் அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா ஆகியோருக்கு எஸ்.ஐ.டி நோட்டீஸ் அனுப்பிய நாளில் இந்த விளக்கம் வந்துள்ளது.

இதற்கிடையில், பிரஜ்வால் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் எஸ்.ஐ.டி, செவ்வாய்க்கிழமை ஆஜராக நோட்டீஸைத் தொடர்ந்து அதிகாரிகள் முன் ஆஜராகாததால், லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment