ரூ.241 கோடி சம்பாதித்தேன், ஜி.எஸ்.டி வரி செலுத்தினேன்; பீகார் பேரணியில் வருமானத்தை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒருபோதும் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை, ஆனால் அரசியலில் நுழைந்தபோது, சமூகத்திற்காக பணம் சம்பாதிக்க வசூல் செய்தேன் – பிரசாந்த் கிஷோர்

அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒருபோதும் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை, ஆனால் அரசியலில் நுழைந்தபோது, சமூகத்திற்காக பணம் சம்பாதிக்க வசூல் செய்தேன் – பிரசாந்த் கிஷோர்

author-image
WebDesk
New Update
prashant kishor jan suraaj

ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும் மற்றும் அரசியல் மூலோபாயவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான பிரசாந்த் கிஷோர் திங்களன்று பீகார் பேரணியில் தனது வருமானத்தை அறிவித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர், மற்றவர்களைப் போல தான் ஒரு "திருடன்" அல்ல என்றும், தனது வருவாய் மற்றும் அதை வைத்து என்ன செய்தேன் என்பது குறித்து தெளிவாகப் பேச முடியும் என்றும் கூறினார்.

Advertisment

அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒருபோதும் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும், ஆனால் அரசியலில் நுழைந்தபோது, சமூகத்திற்காக பணம் சம்பாதிக்க இதை மாற்றியதாகவும் கிஷோர் கூறினார்.

பிரசாந்த் கிஷோரின் வருமானம் மற்றும் செலவுகள்

ஜனக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் உரையாற்றிய ஜன் சுராஜ் தலைவரான பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளில், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு நான் வழங்கிய ஆலோசனைகள் மூலம் ரூ.241 கோடி சம்பாதித்தேன். இந்தப் பணத்தில், நான் ரூ.30,98,68,764 ஜி.எஸ்.டி. வரி செலுத்தினேன், இது வருமானத்தில் 18% ஆகும். நான் ரூ.20 கோடி வருமான வரி செலுத்தி ரூ.98.95 கோடியை எனது ஜன் சுராஜ் கட்சிக்கு நன்கொடையாக அளித்தேன்” என்றார்.

(நாங்கள் திருடர்கள் அல்ல)" என்று அரசியல் பிரச்சாரங்களுக்கு அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பது குறித்த தனது போட்டியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார். பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், பல சந்தர்ப்பங்களில் பிரசாந்த் கிஷோரின் வருமான ஆதாரத்தை கேள்வி எழுப்பினார்.

Advertisment
Advertisements

ஜே.டி.யு, பா.ஜ.க தலைவர்கள் மீதான பிரசாந்த் கிஷோரின் பெரிய குற்றச்சாட்டுகள்

ஜே.டி.யு தலைவர் அசோக் சவுத்ரி மீதான குற்றச்சாட்டை வலியுறுத்திய பிரசாந்த் கிஷோர், அசோக் சவுத்ரியின் சொத்து குறித்து கூறப்பட்டுள்ளவற்றில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

"அசோக் சவுத்ரி ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளார். ஒரு கட்டா நிலம் கிடைத்தாலும், நான் (அசோக் சவுத்ரி) ஜன் சுராஜுக்கு அடிமையாகிவிடுவேன் என்று கேமரா முன் கூறினார். இப்போது ஆவணங்கள் வெளியிடப்பட்ட பிறகு, இது உங்கள் நிலம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது உங்கள் நிலம் என்றால், ஜன் சுராஜுக்கு அடிமையாக இருக்காதீர்கள், பீகார் மக்களுக்கு அடிமையாக இருக்க தயாராகுங்கள், ராஜினாமா செய்யுங்கள்... நீங்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், நாங்கள் ஆளுநரையும் நீதிமன்றத்தையும் சந்திப்போம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

இது மட்டுமல்லாமல், பீகார் துணை முதல்வரும் பா.ஜ.க தலைவருமான சாம்ராட் சவுத்ரி ஒரு "குற்றவாளி" என்றும், அவர் "தவறான ஆவணங்களுடன்" தான் ஒரு மைனர் என்பதை நிரூபித்ததால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார்.

"(பீகார் துணை முதல்வர்) சாம்ராட் சவுத்ரி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், ஏனெனில் அவர் 1995 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டார் ஆனால் அவர் மைனர் என நீதிமன்றம் தவறாக தீர்ப்பளித்த பிறகு விடுவிக்கப்பட்டார்," என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சாம்ராட் சவுத்ரி, "... மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், சில விஷயங்களை சரியான மன்றத்தில் தீர்க்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது ஊழலை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிப்பவர் முதலில் தனக்குத்தானே பதிலளிக்க வேண்டும்," என்றார்.

Bihar Prashant Kishor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: