![Prashant Kishors presentation, Prashant Kishors presentation similarity with G 23 leaders ideas, காங்கிரஸ், ஜி-23 தலைவர்களின் யோசனைகளைப் பிரதிபலிக்கும் பிரசாந்த் கிஷோரின் விளக்கம், பிரசாந்த் கிஷோர், பவர்பாயிண்ட் விளக்கம், ஜி-23 தலைவர்கள், Prashant Kishor, Prashant Kishor congress, Sonia Gandhi, G-23 leaders, Political Pulse, Rahul gandhi, India news, Tamil Indian express](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/04/Prashant-Kishore-2.jpg)
காங்கிரஸ் கட்சியின் வாய்ப்பை நிராகரிக்கும் அதே நேரத்தில், பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்குள் ஆழமாக வேரூன்றியுள்ள கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்ய கட்சித் தலைமை மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை என்று செவ்வாய்க்கிழமை கூறினார். காங்கிரஸின் தலைமைச் சிக்கலில் பிராசாந்த் கிஷோர் எடுத்துக்கொள்வது, காங்கிரஸ் கட்சியின் ஜி-23 கிளர்ச்சித் தலைவர்கள் என்பத் ஜி-23 கிளர்ச்சித் தலைவர்கள் கட்சி அல்லது ஜி-23 போன்றது என்று கூறுகிறார். உண்மையில், கடந்த ஆண்டு காங்கிரஸுக்கு தேர்தல் உத்தி நிபுணர் அளித்த விளக்கத்தைப் பார்த்தால், ஜி-23 தலைவர்கள் சோனியா காந்திக்கு அனுப்பிய 2020 கடிதத்திலும், அப்போதிலிருந்து, அவர்களின் பல பொது அறிவிப்புகளிலும் அவரது பல பரிந்துரைகள் பிரதிபலிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
ஜி-23 தலைவர்கள் கடிதம் எழுதியதை அடுத்து அவர்கல் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள். அவர்களுக்கும் நேரு குடும்பத்தினரின் வழிநடத்தும் தலைமைக்கும் இடையே பதற்றம் இருந்து வருகிறது.
“காங்கிரஸ் தலைமையின் நிச்சயமற்ற நிலை மற்றும் சறுக்கல்கள் காங்கிரஸ் தொண்டர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் கட்சியை விட்டு தலைவர்கள் நிர்வாகிகளுடன் வெளியேறுவதால் கட்சியின் ஆதரவு தளம் குறைந்துள்ளது” என்று ஜி-23 தலைவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் தனது பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில், காங்கிரஸ் எடுக்க வேண்டிய “ஐந்து முக்கிய முடிவுகளை” பட்டியலிட்டுள்ளார். முதலாவது “காங்கிரஸ் கட்சியின் தலைமைச் சிக்கலைச் சரிசெய்தல்”. காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பிரச்னை இல்லை என்று கூறிவருகின்றனர். தலைமைப் பிரச்சினையை சரிசெய்யக் கோரியதற்காக பல தலைவர்கள் ஜி-23 ஐத் தாக்கினர்.
தலைமைப் பிரச்னையைச் சரிசெய்ய, கிஷோர் இரண்டு மாதிரிகளைப் பரிந்துரைக்கிறார். சோனியா காந்தி கட்சியின் தலைவராகவும், ராகுல் காந்தி நாடாளுமன்ற வாரியத் தலைவராகவும், பிரியங்கா காந்தி ஒருங்கிணைப்புப் பொதுச் செயலாளராகவும், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராகவும் மற்றும் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் யு.பி.எ தலைவராகவும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். இந்த மாடல் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் மிதமான நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறுகிறார்.
நேரு குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸ் தலைவராகவும், சோனியாவை யு.பி.ஏ தலைவராகவும், ராகுல் காந்தியை நாடாளுமன்ற வாரியத் தலைவராகவும், பிரியங்கா காந்தியை ஒருங்கிணைப்புபொதுச் செயலாளராகவும் இருக்க வேண்டும் என இந்த மாற்று மாடல் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி தெரிவிக்கிறது. இந்த மாடல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விளக்கக்காட்சி கூறுகிறது.
ஜி-23 தலைவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஜி-23 தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், கடந்த மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், நேரு குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்றும், கட்சியை வழிநடத்த வேறு சில தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
ஜி-23 தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் வட்டார அளவில் உட்கட்சி கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் தேர்தலை வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் சட்டவிதிமுறைப்படி, காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை ஜனநாயகமயமாக்குவதற்காக அழைப்பு விடுக்கும் பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சியானது, காங்கிரஸ் கட்சி அனைத்து மட்டங்களிலும் தேர்தல்கள் மூலம் கட்சியின் அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என்று கூறுகிறது. கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு இல்லாமை பற்றி குறிப்பிடுகையில், பெரும் கவலை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியமனம் செய்யப்பட்டவர்கள். அடிமட்டத்தில் இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தேர்தலில் போராடுவதும் இல்லை என்ரு குறிப்பிட்டுள்ளது.
ஜி-23 தலைவர்களின் கடிதம் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் புவியியல் பரவல் மற்றும் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அமைப்பு மற்றும் சிறிய அளவிலான நிர்வாகத்தை மிகைப்படுத்தல் எப்போதும் எதிர்மறையானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்/அலுவலக பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து நியமிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பொறுப்பாளர் பொதுச் செயலாளரால் மாநில தலைநகரில் இருந்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமனம் குறித்து, ஜி-23 தலைவர்கள் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கடந்த பல ஆண்டுகளாக, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமனங்கள் தேவையில்லாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் மரியாதையுள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் சரியான நேரத்தில் நியமிக்கப்படுவதில்லை. மரியாதையுள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களாக நியமிக்கப்படும் போது கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க சுதந்திரம் வழங்கப்படுவதில்லை… மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு எந்த செயல்பாட்டு அதிகாரமும் வழங்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் தலைமை தோல்வியடையும் போது பொறுப்புக்கூறல் மிகக் குறைவாகவே இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “நாடு தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட வேண்டும்” என்று கோரியுள்ளனர். “கடந்த 25 ஆண்டுகளில் இந்திய அளவில் எந்த ஒரு கட்டமைக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கையையும் கட்சி நடத்தவில்லை” என்று ஜி-23 தலைவர்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டுகிறார்.
ஜி-23 தலைவர்களின் முக்கிய ஆலோசனைகளில் ஒன்று கூட்டு முடிவெடுப்பதற்கான நாடாளுமன்ற வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். கட்சி விவகாரங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கூட்டுச் சிந்தனை மற்றும் முடிவெடுப்பதற்காக மத்திய நாடாளுமன்ற வாரியம் அவசரமாக அமைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
பிரசாந்த் கிஷோரின் பரிந்துரையில், ராகுல் காந்தியை தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். நாடாளுமன்றக் குழுவின் தலைவர் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் மக்களின் குரலாக ஒலிப்பதற்கான நம்பகமான தேர்வாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மக்களின் குரலை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தி, மோடிக்கு எதிராக அவரை களமிறக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
I declined the generous offer of #congress to join the party as part of the EAG & take responsibility for the elections.
— Prashant Kishor (@PrashantKishor) April 26, 2022
In my humble opinion, more than me the party needs leadership and collective will to fix the deep rooted structural problems through transformational reforms.
ஜி-23 தலைவர்கள் அமைப்பு பின்னணி மற்றும் தீவிரமான கள அறிவு மற்றும் அனுபவமுள்ள தலைவர்களை உள்ளடக்கிய மத்திய தேர்தல் குழுவை மறுசீரமைக்க அழைப்பு விடுத்துள்ளனர். பிரசாந்த் கிஷோர், சிறந்த தேர்தல் நிர்வாகத்திற்காக காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தை வலுப்படுத்த தனது திட்டங்களின் ஒரு பகுதியாக அதிகாரமளிக்கப்பட்ட மத்திய தேர்தல் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி-23 தலைவர்கள், “காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கட்சியின் மறுமலர்ச்சிக்கு கூட்டாக வழிகாட்டுவதற்கு ஒரு கட்சித் தலைமைப் பொறிமுறையை அவசரமாக ஏற்படுத்துவது இப்போது இன்றியமையாதது” என்று வாதிட்டனர்.
காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக அமைப்பாக செயல்படுவதை முடக்கிவிட்டதாக பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டுகிறார். 1885 மற்றும் 1998 க்கு இடையில், காங்கிரஸ் கட்சிக்கு சராசரியாக 1.85 ஆண்டுகள் பதவிக்காலம் என 61 தலைவர்கள் இருந்தனர். ஆனால், 1998 முதல் 23 ஆண்டுகளில் கட்சிக்கு இரண்டு தலைவர்கள் இருந்தனர். “65% க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்கள் மற்றும் 90% தொகுதித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவருடனோ செயலாளருடனோ அல்லது அமைப்போடும் கூட சந்திக்கவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் கூறுகிறார்.
“போராட்டத்தை மீண்டும் வழிநடத்த குறிப்பிட்ட குழுக்களை அணுகியபோது, இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகியோருடன் எதிரொலிக்கும் ஒரு கருத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று ஜி-23 தலைவர்களின் கடிதம் கூறியது.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், நிலமற்ற தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என எட்டு முக்கிய குழுக்கள் காங்கிரசுக்கு முக்கிய ஆதரவைத் திரட்டும் திறனைக் கொண்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறுகிறார்.
பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் தேசியக் கூட்டணியை உருவாக்க ஜி-23 அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக, ஒரு காலத்தில் காங்கிரசில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வர நேர்மையாக முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் விருப்பமான அரசியல் தளமான புதிய காங்கிரஸை உருவாக்குவதே காலத்தின் தேவை என்று பிரசாந்த் கிஷோர் தனது பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில் கூறுகிறார்.
பிரசாந்த் கிஷோர் மூன்று கருத்துகளை முன்வைக்கிறார் - ஒன்று காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியும் இல்லாமல் தேர்தலுக்குச் செல்வது, இரண்டு அனைத்துக் கட்சிக் கூட்டணியை உருவாக்குவதன் மூலம் தேவை அடிப்படையிலான கூட்டணியுடன் செல்வது, மூன்றாவதாக, கட்சி 70 முதல் 75 சதவீத மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகும். மீதமுள்ள இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும். இதில் பிரசாந்த் கிஷோர் கடைசி மாடலை விரும்புகிறார். அதன்படி, காங்கிரஸ் கட்சி 17 மாநிலங்களில் 358 இடங்களில் தனித்து போட்டியிட வேண்டும். ஐந்து மாநிலங்களில் 168 இடங்களில் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட வேண்டும் என்று கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.