ஜனவரி 10 ஆம் தேதி, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் "முன்னெச்சரிக்கை" டோஸ் வழங்கத் தொடங்கும் போது, முதல் பெறுநர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும், ஒன்பது மாதங்களுக்கு முன்பு இரண்டாவது டோஸ் பெற்றவர்களாகவும் இருக்கலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (டிஎச்எஸ்டிஐ) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து அறிவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை ஒன்பது மாதங்களில் வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.
ஒன்பது மாத இடைவெளி என்பது, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் முதன்மை தடுப்பூசி அட்டவணையில்’ இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு, முன்னெச்சரிக்கை தடுப்பூசியின் ஆரம்ப டோஸ்கள் செலுத்தப்படும்- முக்கியமாக சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு முதலில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்படும்.
மார்ச் 1 ஆம் தேதி முதல், குறிப்பிட்ட இணை நோய்களுடன் தொடர்புடைய 60 வயது மற்றும் 45-க்கும் மேற்பட்டவர்களுக்கு, இந்தியாவும் தடுப்பூசி போடத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை டோஸுக்கு யார் தகுதியுடையவர்கள் என்பதை கோ-வின் தளம் தானாகவே பிரதிபலிக்கும். ஜனவரி 10 முதல் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என்பதற்கான எண்கள் எங்களிடம் தயாராக உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்” என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி 10 முதல் இந்தியாவால் திட்டமிடப்பட்ட’ முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளால் நிர்வகிக்கப்படும் "பூஸ்டர்" ஷாட்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆதாரங்கள் காட்டுகின்றன.
சனிக்கிழமை இரவு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “பூஸ்டர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவில்லை; மூன்று முன்னுரிமைக் குழுக்கள் - சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களை கொண்டவர்கள் - தடுப்பூசியின் "முன்னெச்சரிக்கை டோஸ்" பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
"இரண்டு டோஸ் தடுப்பூசி (கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் போன்றவை) நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில் போதுமான அளவு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யாமல் போகலாம் - எனவே, அவர்களின் முதன்மை தடுப்பூசி முழுமையடையாததாகக் கருதப்படுகிறது," என்று ஒரு ஆதாரம் கூறியது.
"நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களின்’ இந்த குறிப்பிட்ட குழுவிற்கு முதன்மை தடுப்பூசியை முடிக்க, கூடுதல் ஷாட் தேவைப்படுகிறது."
உலகளவில், பூஸ்டர் டோஸ் மற்றும் கூடுதல் டோஸ் என்ற வார்த்தைகள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
"பூஸ்டர் ஷாட்’ மக்கள் தொகை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன; பயனாளியின் உடல் நிலைகளை (இணை நோய்கள்) பொருட்படுத்தாமல் அவை நிர்வகிக்கப்படுகின்றன,” என்று ஒரு ஆதாரம் கூறியது.
“எங்களிடம் (இந்தியா) பூஸ்டர் ஷாட் பற்றிய விரிவான மக்கள்தொகை அடிப்படையிலான தரவு இல்லாததால், நாங்கள் மிகுந்த எச்சரிக்கையின் ஒரு நடவடிக்கையாக, பாதிக்கப்படக்கூடிய அல்லது வைரஸுக்கு ஆளாகக்கூடிய குழுக்களுக்கு, முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குகிறோம்” என்று ஆதாரம் கூறியது.
ஆதாரங்களின்படி, அனைத்து வயதினருக்கும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது குறித்த “பான்-இந்தியா” தரவுகளின் காரணமாக, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) ஒரு சில உறுப்பினர்கள், பூஸ்டர் டோஸ் நிர்வாகத்திற்கு எதிராக இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“