மணிப்பூர் முதல்வர் பதவியை என். பிரேன் சிங் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 13-ம் தேதி மத்திய அரசு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Days after Biren Singh resignation, President’s Rule imposed in Manipur
மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி-சோ சமூகங்களுக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன, இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இருந்தது. நவம்பர் 2024-ல், கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (NPP) பிரேன் சிங் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடனான சந்திப்பிற்குப் பிறகு, பிப்ரவரி 9-ம் தேதி பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரேன் சிங்கிற்கு அடுத்து யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுக்க ஒருமித்த கருத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால், அதன் முயற்சிகளில் தோல்வியடைந்தது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் எதிர்க்கட்சிகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் வலுவான கோரிக்கைகளை விடுத்தனர். இதையடுத்து, மணிப்பூரில் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.