ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி தீபாவளி கொண்டாடிய நரேந்திர மோடி
உங்களின் நாட்டுப் பற்று தான் 125 கோடி இந்தியர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது என உருக்கம்
பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகள் : வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தீபாவளி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாட கேதர்நாத் சென்றுள்ளார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட இருக்கிறார் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சில முக்கிய அமைச்சர்கள் உட்பட பலர் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை இன்று கொண்டாட உள்ளனர். கேதர்நாத் சென்ற நரேந்திர மோடி அங்கிருக்கும் புனித தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மத்தியில் நரேந்திர மோடி பேசிய போது ”நீங்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றினால் தான் 125 கோடி இந்தியர்களின் கனவு மற்றும் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்.
அங்குள்ள வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நரேந்திர மோடி.
Celebrated Diwali with our valorous Army and @ITBP_official personnel at Harsil in Uttarakhand.
India is immensely proud of all those who protect our nation, with utmost dedication and courage.
We salute them! pic.twitter.com/siW4Yz2UUd
— Narendra Modi (@narendramodi) 7 November 2018
ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான நலத்திட்டங்கள் பற்றி பேசிய மோடி
ஐடிபிபியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விரிவாக பேசியுள்ளார். இந்திய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புப் படையினை உறுதிப்படுத்தும் முனைப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நலத்திட்டங்கள் பற்றியும், சர்வதேச அளவில் இந்திய ராணுவம் எப்படி நன்மதிப்பினை பெற்றுவருகிறது என்பது தொடர்பாகவும் பேசியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் மோடி.
While interacting with Army and @ITBP_official Jawans in Harsil, spoke about the numerous steps being taken by the Government of India for the strengthening of the defence sector, welfare of ex-servicemen and highlighted how Indian forces are admired globally for the skills. pic.twitter.com/DFAuJfrQwy
— Narendra Modi (@narendramodi) 7 November 2018
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகள்
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதில் “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள், இந்த விழா வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழுமையினை தரட்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.
दीपावली की सभी देशवासियों को हार्दिक बधाई। मेरी कामना है कि प्रकाश का यह पावन पर्व सबके जीवन में सुख, शांति एवं समृद्धि लेकर लाए।
Happy Diwali! May this festival bring happiness, good health and prosperity in everyone’s lives. May the power of good and brightness always prevail!
— Narendra Modi (@narendramodi) 7 November 2018
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook